tamilnadu

img

பணி நிரந்தரம் கோரி மறியல்: 6 ஆயிரம் ஒப்பந்த ஊழியர்கள் பங்கேற்பு

சென்னை,பிப்.16 - பணி நிரந்தரம் செய்யக்கோரி மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் வியாழனன்று (பிப்.16) தமிழ்நாடு முழுவதும் மறியலில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் 6  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மின்வாரியத்தில் சுமார் பல்லாயிரக்கணக்கான ஒப்பந்த ஊழியர்கள் பணி யாற்றுகின்றனர். கடந்த 25 ஆண்டுகளாக பணியாற்றும் ஊழியர்களை நிரந்தரம் செய்ய மின்வாரிய நிர்வா கம் மறுத்து வருகிறது. நிரந் தர தன்மை வாய்ந்த பணிக ளில் ஒப்பந்த ஊழியர்களை நியமிக்கக் கூடாது என்ற அர சாணையை மீறி அரசு செயல் படுகிறது. ஒப்பந்த முறை  ஒழிப்பு மற்றும் ஒழுங்கு படுத்துதல் சட்டத்தையும் ஆட்சியாளர்கள் மீறி செயல்படுகின்றனர். திமுக தனது தேர்தல் அறிக்கையில், அரசு பொதுத்துறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணி யாற்றும் ஒப்பந்த ஊழியர் களை பணி நிரந்தரம் செய் வோம் என்று கூறியது.

திமுக  ஆட்சிக்கு வந்து 20 மாதங் களை கடந்த பின்னரும் ஒப்பந்த ஊழியர்களை பணி   நிரந்தரப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், ஒப்பந்த  ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யக் கோரி மாநிலம்  முழுதும் வட்ட மேற்பார்வை  பொறியாளர் அலுவலகங் கள் முன்பு மறியல் நடத்தி னர். தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு இந்த போராட்டத்தை நடத்தியது. வடசென்னை அனல் மின்நிலையம் முன்பு நடைபெற்ற மறியலில் மாநிலத் தலைவர் தி. ஜெய்சங்கர் பங்கேற்றார்.  தென்சென்னையில் துணைப் பொதுச் செயலா ளர் ஆர்.ரவிக்குமாரும் மற்ற துணைப் பொதுச் செயலாளர்கள் பழனி வேல் கடலூரிலும், செங்கல் பட்டிலும் ரவிச்சந்திரன்,  திருநெல்வேலியிலும் பீர்முகமதுஷா, பொன்னே ரில் சென்னை மண்டலச்  செயலாளர் ஏ.முருகானந்த மும் கலந்து கொண்டனர்.