சிதம்பரம், ஆக. 27- கடலூர் மாவட்டம், காட்டுமன் னார்கோயில் திருநாரையூர் கிரா மத்தில் உத்திராபதி என்பவருக்கு சொந்தமான இடத்தில் புதிய வீடு கட்டுவதற்கு சனிக்கிழமை அஸ்தி வாரம் தோண்டும் போது சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக அஸ்தி வாரம் தோண்டும் பணியில் இருந்த வள்ளல், இதுகுறித்து வீட்டு உரிமையாளருக்கு தெரிவித்துள் ளார். அவர் அப்படியே இருக்கட்டும் எனக் கூறி வேலையாட்களை மாற்று வேலை செய்ய சொல்லிவிட்டு மாலை வீட்டிற்கு அனுப்பி விட்டார். அதன் பிறகு வீட்டு உரிமையாளர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அங்கு பள்ளம் தோண்டி, அங்கி ருந்த சிலைகளை தங்கள் வீட்டில் வைத்துள்ளார். மீண்டும் ஞாயிற்றுக்கிழமை காலை வேலைக்கு வந்த வள்ளல் அங்கு பள்ளம் தோண்டப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் இதுகுறித்து கிராம உதவியாளருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டாட் சியர் தமிழ்ச்செல்வன், வருவாய் ஆய்வாளர் சீனிவாசன், கிராம நிர் வாக அலுவலர் ரவி ஆகியோர் உரிமையாளர் வீட்டில் 6 சிலைகள் இருப்பதை கண்டறிந்தனர். இது குறித்து குமராட்சி காவல் நிலை யத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் 6 சிலைகளை மீட்டனர். இதுகுறித்து சேத்தியா தோப்பு டிஎஸ்பி ரூபன்குமார் நேரடி யாக சென்று விசாரணை நடத்தி னார். தற்போது கைப்பற்றப்பட்ட உலோக சிலைகளில் சிவன், பார்வதி ஆடிப்பூர அம்மன், போக சக்தி அம்மன், பஞ்சமூர்த்தி அம்பாள், இடம்புரி விநாயகர் ஆகியவை பீடத்துடன் உள்ளன. மேலும் அங்கு ஏதேனும் சிலைகள் உள்ளதா என ஆய்வு மேற்கொண்டு வருகின்ற னர்.