கடமலைக்குண்டு, மார்ச் 3- தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி தாலுகா, கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி யில் தமிழ் ஆசிரியராக பணியாற்றுபவர் செல்வம். இவர் தொல்லியல் ஆய்வாளராக வும் செயல்பட்டு வருகிறார். மலைகளும், காடு களும் சூழ்ந்த வருசநாடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் பழங்கால நடுகற்கள், கல்வெட்டு கள், முதுமக்கள் தாழிகள் போன்றவற்றை கண்டுபிடித்து மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறார். இந்நிலையில் வருசநாடு அருகே கருப்பையாபுரம் பகுதியில் மலைக்குன்றின் உள்ளே பாறைகளில் சுமார் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஓவியங்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளார். பூச்சிக்கல்பாறை என்று அழைக்கப்படும் இந்த குன்றின் உள்ளே குகை போன்று மனிதர்கள் தங்கும் வகையில் அமைந்துள்ள பாறையில் பண்டைய கால மக்களின் வாழ்க்கை முறையை விளக்கும் விதமாக ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வேட்டை சமூகத்தைச் சேர்ந்த மக்கள் இந்த குகை பகுதியில் வாழ்ந்துள்ளதாகவும், அவர்கள் வாழ்க்கை முறையை காட்சிப்படுத்தும் வித மாக இந்த ஓவியங்கள் வரையப்பட்டுள் ளன. அந்த ஓவியத்தில் மான், புலி போன்ற விலங்குகளும், அந்த விலங்கு களை வேட்டையாடும் மனிதர்கள், மனிதர்க ளுக்குள் ஏற்படும் சண்டை போன்றவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. வருசநாடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதி களில் இதுபோன்ற பழமையான ஓவியங் கள், நடுகற்கள் போன்றவை இருப்பது கற்காலத்தில் இந்த பகுதியில் மக்கள் வாழ்க்கை வரலாற்றை வெளிப்படுத்துவதாக இருப்பதாக ஆசிரியர் செல்வம் தெரி வித்துள்ளார்.