கடலூர், ஜூன் 19- கடலூர் அருகே மேல்பட்டாம்பாக்கத்தில் தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஐந்து பேர் பலியானார்கள். 80 பேர் படுகாயமடைந்தனர். கடலூரிலிருந்து பண்ருட் டிக்கு திங்களன்று(ஜூன் 19) பயணிகளை ஏற்றிக் கொண்டு தனியார் பேருந்து சென்றது. இதேபோன்று திருவண்ணாமலையி லிருந்து பண்ருட்டி மார்க்க மாக கடலூருக்கு பயணிகளை ஏற்றிகொண்டு தனியார் பேருந்து எதிரில் வந்தது. அப்போது, மேல்பட்டாம் பாக்கத்தில் முன் பக்க டயர் வெடித்ததில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரில் வந்த பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளா னது. நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் பேருந்துகள் முற்றிலும் சேதமடைந்தது. பின்னர், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டெடுத் தனர். இதில் படுகாய மடைந்த 80-க்கும் மேற்பட்ட வர்களை 108 ஆம்புலன்ஸ் மூலமாக அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலி யானார்கள். மேலும் மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜா ராம் சம்பவ இடத்திற்கு உட னடியாக வந்து மீட்டு பணிகளை வேகப்படுத் தினார். இச்சம்பவத்தால் பண் ருட்டி-கடலூர் சாலையில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து முற்றி லும் பாதிக்கப்பட்டது.
ஆறுதல்-நிதியுதவி
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருப வர்களை அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சி.வே. கணேசன், மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் தம்புராஜ், சட்டமன்ற உறுப்பினர் கோ.ஐயப்பன், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா உள்ளிட்டோர் பார் வையிட்டு ஆறுதல் கூறினர். மேலும், முதலமைச்சர் அறிவித்த 2 லட்ச ரூபாய்க்கான காசோலை யினை இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் வழங்கினர்.
சிபிஎம் தலைவர்கள்...
இந்த விபத்து குறித்து கேள்விப்பட்ட மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மருதவாணன், வி. சுப்புராயன், ெஜ.ராஜேஷ் கண்ணன், மாநகர செய லாளர் ஆர்.அமர்நாத் உள்ளிடோரும் மருத்துவ மனைக்கு சென்று காய மடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.