அலட்சியம் காரணமா?
தேனி, மே 30- தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மருத்து வர்கள், செவிலியர்கள் துப்புரவு பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. துபாயிலிருந்து வரவழைக் கப்பட்ட இளைஞருக்கு கொரோனா தொற்று உள்ளதா என பரி சோதனை செய்யாமல் பொது வார்டில் இரண்டு நாட்கள் தங்க வைக்கப்பட்டார். இரண்டு நாட்க ளுக்கு பிறகு கொரோனா பரிசோ தனை செய்யப்பட்டதில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவருடன் இரண்டு நாட்கள் பழகி வந்த அந்த வார் டில் பணிபுரிந்த அனைவரையும் தனிமை படுத்தி உள்ளனர் பத்து செவிலியர்கள், ஆறு மருத்து வர்கள், 12 பயிற்சி மருத்துவர்கள், 14 தூய்மைப் பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள னர். மருத்துவக்கல்லூரி மருத்து வமனை முதல்வர் இளங்கோ வன் அலட்சியத்தால் நடந்ததாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட டாக்டர் செவிலி யர்கள் பயிற்சி மருத்துவர்கள் தூய்மைப் பணியாளர்கள் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி யில் உள்ளனர்.