பள்ளி மாணவர்களுக்கு வழங்க 4.19 கோடி பாடப் புத்தகங்கள் தயார்
சென்னை, மே 10- தமிழக பள்ளிக் கல்வியில் நிகழ் கல்வியாண்டில் (2025-2026) 1 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் 64 லட்சம் மாணவர்களுக்கு வழங்குவ தற்காக 4.19 கோடி பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு மாவட்ட கிடங்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த பாடப் புத்தகங்கள் ஜூன் முதல் வாரம் பள்ளி கள் திறக்கப்படும் நாளன்றே மாணவர் களுக்கு விநியோகிக்கப்படும் என அதி காரிகள் தெரிவித்தனர். தமிழகத்தில் அனைத்து வகை அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் மாநில பாடத்திட்டத் தின்கீழ் தமிழ் வழியில் இயங்கும் வகுப்புகள் ஆகியவற்றில் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாண வர்களுக்கு பாடநூல்கள், நோட்டுப் புத்தகங்கள், காலணிகள், காலேந்தி கள் மற்றும் காலுறைகள், கம்பளிச்சட்டை, மழைக்கோட்டு, சீருடைகள், வண்ண பென்சில்கள், வண்ண கிரையான்கள், மிதிவண்டிகள், கணித உபகரணப் பெட்டிகள் மற்றும் புவியியல் வரை படம் உள்ளிட்ட நலத்திட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், நிகழ் கல்வியாண்டில் கோடை விடுமுறை நிறைவடைந்து அனைத்துப் பள்ளிகளும் ஜூன் முதல் வாரத்தில் திறக்கப்படவுள்ளன. அவர் களுக்கு வழங்குவதற்கு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணி கள் கழகம் சார்பில் 4.19 கோடி பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு அந்தந்த மாவட்ட கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இயக்குநர் நேரில் ஆய்வு
சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு வழங்குவதற்காக சிந்தாதிரிப்பேட்டை யில் உள்ள கல்யாணம் மேல்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டுள்ள பாடப் புத்தகங்களை பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன், சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், “இந்த ஆண்டு ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வழங்குவதற்காக 495 தலைப்புகளில் மொத்தம் 4.19 கோடி பாடப் புத்த கங்கள் அச்சிடப்பட்டுள்ளன. அவற்றில் 2.72 கோடி பாடப் புத்தகங்கள் மாண வர்களுக்கு விலையில்லாமல் வழங்கப் படும். எஞ்சியுள்ள 1.47 கோடி பாட நூல்கள் விற்பனைக்காக அச்சிடப்பட்டு உள்ளன. ஒட்டுமொத்தமாக 64 லட்சம் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்படும். அனைத்து மாவட்ட கிடங்குகளில் உள்ள பாடப் புத்தகங்கள் ஒரு வாரத்துக் குள் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும். இதையடுத்து கோடை விடுமுறைக்குப் பிறகு வரும் ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்படும் போது முதல் நாளே மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது” என்றனர்.