tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

4 புதிய அரசு கலை-அறிவியல் கல்லூரிகள் திறப்பு

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்வில், உயர்கல்வித்துறை சார்பில் 2025-26 ஆம் கல்வியாண்டு முதல் செயல்படும் வகையில் வேலூர்  மாவட்டம் கே.வி. குப்பம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறை யூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை, திரு வண்ணாமலை மாவட்டம் செங்கம் ஆகிய இடங்களில் 4  புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி  வைத்தார். இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் எ.வ.வேலு, தலைமைச் செயலாளர்  முருகானந்தம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

குடியரசுத் தலைவருக்கு  முதலமைச்சர் வாழ்த்து '

சென்னை: 67 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு- வுக்கு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், “தேசத்திற்கு நீங்கள் செய்யும் சேவையில் உங்களுக்கு நல்ல ஆரோக்கி யம், அமைதி மற்றும் மகிழ்ச்சி கிடைக்க வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

காத்திருப்பு டிக்கெட்: வரம்பு நிர்ணயம்

சென்னை: ரயிலில் வெயிட்டிங் லிஸ்ட் எனப்படும் காத்திருப்பு டிக்கெட்டுகள் எண்ணிக்கை 25 சதவீதம் வரை மட்டுமே வழங்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. ரயில் களில் மொத்த இருக்கைகள் எண்ணிக்கையில் 25 சதவீதம்  மட்டுமே காத்திருப்பு டிக்கெட் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஏராளமான பயணிகளுக்கு காத்திருப்பு டிக்கெட்  வழங்கப்படுவதால் டிக்கெட் உறுதியாகாமல் பலர் ஏமாற் றம் அடைந்து வருகின்றனர். காத்திருப்பு டிக்கெட் வைத்துக்  கொண்டு ஏராளமான பயணிகள், ரயில்களில் ஏறுவதை  கட்டுப்படுத்தவும் 25 சதவீதம் என வரம்பு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

வருமான வரி சோதனை நிறைவு

சென்னை: சென்னையில் பிரபல தனியார் உணவகத் தில் 2 நாட்களாக நடந்த வருமான வரி சோதனை நிறைவு  பெற்றது. அண்ணா நகர், தரமணி, வேளச்சேரி உள்ளிட்ட 5  இடங்களில் நடைபெற்ற வருமான வரி சோதனை நிறைவு பெற்றுள்ளது. 2 நாட்களாக நடந்த சோதனையில் பல்வேறு  முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளி யாகியுள்ளது.

ஜூன் 25 வரை மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசைக் காற்றில் நிலவும் வேக மாறுபாடு காரணமாக சனிக்கிழமை  ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூன் 21 முதல் 25  ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மித மான மழை தொடர்ந்து பெய்யக் கூடும் என்று சென்னை  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி  

சென்னை: “வட மாநிலங்களில் பெரும்பான்மை மாநிலங்களில் ஆட்சி செய்து வரும் ஆதிக்க கொள்கை கொண்ட பாஜக தமிழ்நாட்டில் காலூன்ற இயலாததற்கு, தமிழ் மக்களின் சமூக நீதி கொள்கை முக்கிய காரண மாக இருக்கிறது. அதனால், முருகரை வைத்து அரசியல் செய்ய திட்டமிட்டிருக்கிறது என்றும், முருக பக்தர்களின் ஆன்மீக உணர்வை, நம்பிக்கையை அரசியல் ஆதா யம் தேடும் மலிவான செயலுக்கு பயன்படுத்தும் இந்து  முன்னணியின் நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பது டன், அரசியல் ஆதாயம் தேடும் குறுக்கு பார்வை கொண்ட வர்களின் முருக பக்தர்கள் மாநாட்டை தமிழ்நாட்டு மக்கள்  உறுதியாக நிராகரிக்க வேண்டும்” என இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்த ரசன் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

கையெழுத்து தேவையில்லை

சென்னை: திருமணம் ஆகிவிட்டால் பெண் தனது அடை யாளத்தை இழந்து விடுவதில்லை என்றும், பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிக்க கணவரின் அனுமதியையோ, கை யெழுத்தையோ மனைவி பெற வேண்டிய அவசியம் இல்லை  என்றும், கணவரின் கையெழுத்தைப் பெற வற்புறுத்தாமல்  பாஸ்போர்ட் வழங்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டிருக்கிறது.

ஆம்ஸ்ட்ராங் வழக்கு

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பல முக்கிய அரசியல் கட்சியினரின்  தொடர்பு உள்ளதால், இந்த வழக்கை சிபிஐ  விசாரணைக்கு உத்தர விடக் கோரி அவரது சகோ தரர் கீனோஸ் ஆம்ஸ்ட்ராங்  சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத் தாக்கல்  செய்திருக்கிறார்.

கமிஷன் வசூல்

சென்னை: குவாரி உரிமையாளர்களிடம் நிறத் திற்கேற்ப 40 முதல் 70 சதவீதம் வரை கமிஷன் வசூலிக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றத் தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இதில், அரசு அதி காரிகளுக்கும், அமைச்சர் களுக்கும் பணம் கொடுக் கவே இந்த தொகை வசூ லிப்பதாக மனுவில் புகார்  கூறப்பட்டுள்ளது. இந்த  வழக்கில் ஜூன் 25 ஆம்  தேதிக்கு பதிலளிக்க புவி யியல் மற்றும் சுங்கத் துறை இயக்குநருக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது

பாஸ் தேவையில்லை

மதுரை: மதுரை சுற்றுச்சாலை அம்மா திடலில் இந்து முன்னணி சார்பில் ஜூன் 22 அன்று முருக பக்தர்கள் மாநாடு  நடைபெறுகிறது. இதற்கி டையே, இந்த மாநாட்டை  நடத்துவதற்கு உயர்நீதி மன்ற மதுரை கிளை  பல்வேறு நிபந்தனை களை விதித்தது. அதில், “மாநாட்டுக்கு வரக்கூடிய வாகனங்கள் வாகன காப்பீடு, ஓட்டுநர் உரிமம்,  ஓட்டுநரின் ஆதார் அட்டை, வாகன பதிவுச் சான்று உள்ளிட்ட ஆவ ணங்களை காவல்துறை யிடம் வழங்க வேண்டும். இதனை பதிவு செய்த பின்னர்தான் உள்ளே அனுமதிக்க வேண்டும்” என உத்தரவிட்டனர். மேலும், முருக பக்தர்கள் மாநாட்டிற்கு வரக்கூடிய வாகனங்கள் பாஸ் பெற்றி ருக்க வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்தனர்.

ரோப் வே திட்டம்

சென்னை: தமிழகத் தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த அரசு பல் வேறு திட்டங்களை செயல் படுத்தி வருகிறது. மலை பிரதேசங்களுக்கு பொது மக்கள் எளிதாக சென்று  வரும் வகையில் திட்டங் களை செயல்படுத்த நட வடிக்கை எடுத்து வரு கிறது. ஏற்காடு, ஏலகிரி ஆகிய மலைப்பிரதேச சுற்றுலாத் தலங்களில் ரோப் கார் அமைப்பதற் கான திட்டம் தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய சுற்றுலா வளர்ச்சி கழகம் டெண்டர் கோரியுள்ளது.