tamilnadu

img

மெட்ரோ ரயிலில் 10 ஆண்டுகளில் 39 கோடி பேர் பயணம்

மெட்ரோ ரயிலில் 10 ஆண்டுகளில் 39 கோடி பேர் பயணம்

சென்னை, ஜூன் 10- சென்னை மெட்ரோ ரயில்களில் 39 கோடி பேர் பயணம் செய்துள்ளனர் என்றும் விரைவில் மாதம் 1 கோடி பயணிகளை நோக்கி மெட்ரோ பயணிப்பதாக மெட்ரோ நிர்வாகம் தெரி வித்துள்ளது. 2025-ஆம் ஆண்டு மே மாதத்தில் 89  லட்சத்து 9 ஆயிரத்து 724 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள் ளனர். நடப்பாண்டு ஜனவரியில் 86 லட்சத்து 99 ஆயிரத்து 344 பயணி களும், பிப்ரவரியில் 86 லட்சத்து 65  ஆயிரத்து 803 பயணிகளும், மார்சில் 92 லட்சத்து 10 ஆயிரத்து 69 பயணிகளும், ஏப்ரலில் 87 லட்சத்து 89 ஆயிரத்து 587 பயணிகளும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். 3.23 லட்சம் பேர் பயணம் அதிகபட்சமாக 5.5.2025 அன்று 3  லட்சத்து 23 ஆயிரத்து 899 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்து ள்ளனர். 2025, மே மாதத்தில் மட்டும் பயண அட்டைகளை பயன்படுத்தி 5,86,430 பயணிகள், டோக்கன்களை பயன்படுத்தி 1,268 பயணிகள், குழு பயணச்சீட்டு முறையை பயன்படுத்தி 169 பயணிகள், கியூஆர் கோடு பயணச் சீட்டு முறையைப் பயன்படுத்தி 42 லட்சத்து 33 ஆயிரத்து 865 பயணிகள், சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 40 லட்சத்து 87 ஆயிரத்து 992 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்து ள்ளனர். இந்த நிலையில் சென்னை மெட்ரோ  ரயில் சேவை தொடங்கியதில் இருந்து கடந்த ஏப்ரல் வரை 39 கோடி பயணி கள் பயணம் செய்ததாக மெட்ரோ ரயில் நிர்வாகம் பெருமிதமாக தெரிவித் துள்ளது.