tamilnadu

img

அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையை இயக்க வலியுறுத்தி 33-ஆம் நாள் காத்திருப்புப் போராட்டம்

அலங்காநல்லூர், ஜன.15- அலங்காநல்லுார் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பாண்டு கரும்பு அரவையை துவக்கக்கோரி போராட்டம் தொடரும் என மதுரையில் கரும்பு விவசாயி கள் தெரிவித்தனர். இந்த ஆலையில் இந்தாண்டு அரவை யை தொடங்கக்கோரி கரும்பு விவசாயிகள் 33-ஆவது நாளாக சனியன்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களது போராட்டம் டிச.14-ஆம் தேதி தொடங்கியது. தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் என்.பழனிசாமி கூறுகை யில், ‘’ஆலையில் அரவையை துவக்குமள விற்கு மாவட்டத்தில் கரும்பு பயிரிடப்பட்டுள் ளது. இந்தாண்டும் அரவை துவங்காவிட் டால் கரும்பு விவசாயம் பாதிக்கப்படும். ஆலையில் அரவையை துவக்க அரசு முன்வர வேண்டும். அதுவரை போராட்டம் தொடரும்’’ என்றார். சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் டி.ரவீந்திரன் கூறுகையில், “ அமைச்சர்கள், மட்டுமல்ல மதுரை ஆட்சியரும் ஆலையை திறப்பது குறித்து பரிசீலிப்பதாகக் கூறியுள்ள னர். அவர்கள் யாரும் ஆலையைத் திறக்க மாட்டோம் என நிராகரிக்கவில்லை. இந்தச் சூழலில் சர்க்கரை ஆலையில் அரவை தொடங்குவதை உடனடியாக அறிவிக்க வேண்டும். தைப்பொங்கல் நாளன்று பொங்கல் வைத்து காத்திருப்புப் போராட் டத்தைத் தொடர்ந்தோம். மாட்டுப்பொங்கல், அதைத் தொடர்ந்து ஞாயிறன்று முழு ஊர டங்கு நாளிலும் ஜன.17-ஆம் தேதி உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு அன்றும் போராட்டம் தொடரும் என்றார்.