சென்னை,அக்.24- தாம்பரம் அடுத்த ஊரப்பாக் கத்தில் ரயில் மோதி மாற்றுத் திறனாளி சிறுவர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடக மாநிலத்தை பூர்வீக மாக கொண்டவர்கள் விடுமுறைக் காக சென்னை அருகே உள்ள ஊரப்பாக்கம் பகுதியில் உள்ள தங்களது உறவினர் வீட்டிற்கு வந்து தங்கியுள்ளனர். இந்த நிலையில் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வழியாக செங்கல்பட்டு வழித் தடத்தில் வந்த மின்சார ரயில் 3 சிறுவர்கள் மீது மோதியது. ரயில் மோதியதில் சுரேஷ்(15), ரவி(12), மஞ்சுநாத்(11) ஆகிய 3 சிறுவர் களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்த 3 சிறுவர்களும் மாற்றுத்திறனாளி ஆவர். இந்த விபத்து தொடர்ச்சியாக சம்பவ இடத்திற்கு வந்த தாம்பரம் ரயில்வே காவல்துறையினர் மற்றும் ஊரப்பாக்கம் காவலர் கள் உயிரிழந்த சிறுவர்களின் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்ட னர். இதன் காரணமாக 30 நிமிடங் களுக்கு மேலாக தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி வரக்கூடிய மின்சார ரயில் சேவை நிறுத்தப்பட்டது. உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு ரயில் சேவை சீரானது என்று ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.