சென்னையில் மார்ச் 22 அன்று தொகுதி மறுவரையறை குறித்த கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் கலந்து கொள்ள, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மானை தமிழ்நாடு சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி கருணாநிதி, கனிமொழி என்.வி.என். சோமு, எம்.எம்.அப்துல்லா ஆகியோர் அடங்கிய குழுவினர் புதனன்று புதுதில்லியில் சந்தித்து அழைப்பு விடுத்தனர்.
கந்தர்வக்கோட்டையில் 2 துணை மின் நிலையம்
சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் புதன்கிழமை நடந்த கேள்வி நேரத்தில் துணைக் கேள்வி எழுப்பிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் எம்.சின்னதுரை, புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதி, விசலூர் கிராமம் மற்றும் கறம்பக்குடி ஒன்றியம், ஒடப்பவிடுதி ஊராட்சி மன்றம் மணமடை கிராமத்தில் இரண்டு துணை மின் நிலையம் அமைத்திட 2023-24 ஆம் ஆண்டு அறி விப்பு செய்யப்பட்டது. இரண்டு பகுதிகளிலும் இடம் தேர்வு செய்யப்பட்டு, திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை துணை மின் நிலையம் அமைக்கவில்லை. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, நடப்பாண்டில் இந்த இரண்டு துணை மின் நிலையங்களை அமைத்து கொடுக்க அரசு முன்வருமா? என்றார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, “நிர்வாக அனுமதி கிடைத்ததும் இரண்டு இடங்களிலும் விரைவில் துணை மின் நிலையம் அமைத்து கொடுக்கப்படும்” என்றார்.