tamilnadu

img

சாம்சங் தொழிலாளர்களுக்கு வங்கி ஊழியர் ஆதரவு

தொழிற்சங்க உரிமைக்காக 22வது நாளாக (செப்.30) சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் நீடிக்கிறது. இந்நிலையில் போராட்டக் களத்திற்கு சென்று இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் டி.ரவிக்குமார், சாம்சங் ஊழியர் சங்க பொதுச் செயலாளர் எலன், பொருளாளர் மாதேசு ஆகியோரிடம் இரண்டாவது தவணை போராட்ட நிதியாக 70 ஆயிரம் ரூபாயை வழங்கினார். ஏற்கெனவே முதல் தவணையாக பத்தாயிரம் ரூபாய் வழங்கினர்.