tamilnadu

img

தமிழ்ப் பல்கலைக்கழகம் முதல் துணைவேந்தர் வ.அய். சுப்பிரமணியன் 16 ஆவது நினைவேந்தல்

தமிழ்ப் பல்கலைக்கழகம் முதல் துணைவேந்தர்  வ.அய். சுப்பிரமணியன் 16 ஆவது நினைவேந்தல்

தஞ்சாவூர், ஜுன் 29-  தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தர் முதுமுனைவர் வ.அய். சுப்பிரமணியன் 16 ஆவது நினைவு நாளை முன்னிட்டு, துணைவேந்தர் பொறுப்புக் குழு உறுப்பினர்கள் சி. அமுதா, மரு பெ. பாரதஜோதி  தலைமையிலும், பதிவாளர் (பொ) கோ.பன்னீர்செல்வம் முன்னிலையிலும், ஞாயிறன்று, முதுமுனைவர் வ.அய்.சுப்பிரமணியன் நினைவிடத்தில் மலர்தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.  இந்நிகழ்வில், மொழிபெயர்ப்புத் துறைத் தலைவர் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் (பொ.) இரா.சு.முருகன், கண்காணிப்பாளர் சி.பஞ்சநாதன், துறைத்தலைவர்கள், கல்வியாளர்கள், அலுவலர்கள், அலுவல் நிலைப் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.