மதுரை, அக்.3- திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் கந்தசஷ்டி நாட்களில் அங் கப்பிரதட்சணம் செய்யும் 150 பேருக்கு சாமியை தரிசனம் செய்ய சிறப்பு டோக்கன்கள் வழங்கக் கோரிய வழக்கில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் செயல் அலுவலர் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதி மன்ற மதுரைக்கிளை உத்தர விட்டுள்ளது. மதுரை திருமோகூரைச் சேர்ந்த ராமசாமி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார். அதில், “கந்த சஷ்டி விழாவின்போது பக்தர்கள் விரதம் இருந்து அங்கப்பிரதட்சணம் செய்வது வழக்கம். கந்த சஷ்டி நாட்களில் வழக்கத்தைவிட கோவில்களில் அதிக மான கூட்டம் இருக்கும் நிலையில், விரதத்தால் பக்தர்கள் சோர்வுடன் காணப்படுவார்கள், அங்கப்பிரதட்ச னத்தை நிறைவேற்றிய பிறகு கூட்டத்தில் சென்று சாமியை தரிசிப்பது சற்று கடினம். திருப்பதி வெங்கடா ஜலபதி கோவிலில் அங்கப்பிரதட்ச ணம் செய்வோருக்கு சாமியை தரிசிக்க சிறப்பு டோக்கன்கள் வழங்கப்படு கின்றன. அதே போல கந்தசஷ்டி விழாவின் போது கோவில்களில் டோக்கன் வழங்குவது தொடர்பாக ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தபோது, அதை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தாண்டு அக்டோபர் 28-ஆம் தேதி முதல் நவம்பர் 2-ஆம் தேதி வரை கந்த சஷ்டி விழா கொண் டாடப்பட உள்ளது. ஆகவே நீதிமன்றத் தின் உத்தரவு மற்றும் பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு திருச் செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆறு நாட்களும் விரதமிருந்து, காலை ஐந்து மணி முதல் ஆறு மணி வரை அங்கப்பிரதட்சணம் செய்யும் 150 பேருக்கு காலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை சாமியை தரிசனம் செய்ய சிறப்பு டோக்கன்கள் வழங்க உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார். இந்த வழக்கை வியாழனன்று விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், தரணி அமர்வு திருச்செந்தூர் சுப்பிர மணியசாமி கோவில் செயல் அலுவலர் இது தொடர்பாக பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை இரண்டு வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.