tamilnadu

img

மருத்துவத்திற்காக ஆண்டுக்கு 14 லட்சம் வெளிநாட்டினர் தமிழகத்திற்கு வருகை

சென்னை,ஜன.19- சென்னை தரமணியில் புதிதாக கட்டப்பட்டுள்ள தனி யார் பல்நோக்கு மருத்துவ மனையை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் நடிகர் சிவகுமார் ஆகியோர் திறந்து வைத்தனர். திறப்பு விழாவை முன்னிட்டு மருத்துவமனை சார்பில் 100 இலவச இருதய அறுவை சிகிச்சைகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தது. மருத்துவமனை துவக்க விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகை யில், 70-க்கும் மேற்பட்ட உலக நாடு களிலிருந்து இந்தியாவிற்கு மருத்து வத்திற்காக வரத் தொடங்கி இருக்கிறார்  கள். தமிழ்நாட்டில் இருந்து வெளிநாடு களுக்கு சென்று மருத்துவம் பார்க்கும் நிலை தற்போது மாறி, வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்து மருத்துவம் பார்க்கும் நிலை உருவாகியுள்ளது. இந்தியாவில் உள்ள 36 மாநிலங்களிலேயே மருத்துவத்திற்காக வெளிநாடுகளில் இருந்து ஆண்டுக்கு 14 லட்சத்திற்கும் அதிகமானோர் தமிழகத்திற்குத்தான் வருகிறார் கள். மருத்துவமனைகளின் தரமும், மருத்துவ கட்டமைப்பு களின் தரமும் தமிழ்நாட்டில் உயர்ந்துள்ளது. இந்தியாவிற்கே தமிழ்நாடு மருத்துவ மையமாக செயல்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளுக்கு நிகராக தனியார் மருத்துவமனை களும் தமிழ்நாட்டில் புரட்சி செய்து கொண்டு வருகிறது. ‘இன்னுயிர் காப்போம் - நம்மை காக்கும் 48’ திட்டத்தின்  மூலம் ஏறத்தாழ 3 லட்சம் உயிர்கள் தமிழ்நாட்டில் காப்பாற்றப்பட்டுள்ளன. மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளை தானமாக தரு பவர்களுக்கு தமிழக அரசு சார்பில் அரசு  மரியாதை செலுத்தப்படும் எனும் திட்டத்தை அறிவித்ததும் பிற மாநிலங்களி லிருந்தும் இந்த திட்டத்தை குறித்து விசாரித்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் அரசு, தனியார் மருத்துவமனைகள் ஒருங்கிணைந்து உயிர் காக்கும் சாதனை யை படைத்து வருகிறது” என்று தெரிவித் தார்.