14,582 ஒன்றிய அரசுப் பணிகள்
ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடைபெறும் பல்வேறு தேர்வுகளில் பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கான SSC-CGL(Staff Selection Commission - Combined Graduate - Level) அறி விக்கை வெளியாகியுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை யில் +2 தேர்ச்சி பெற்றவர்களும் எழுதி வந்த பல்வேறு குரூப் சி பணியிடங் களையும் பட்டப்படிப்புக்கான தகுதியாக மாற்றிய பிறகு, இந்தத் தேர்வில் நிரப்பப்படும் பணியிடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மத்திய செயலகம், உளவுத்துறை, ரயில்வே, வெளியுறவுத்துறை, ராணு வத் தலைமையகம், அமலாக்கத் துறை, மத்தியப் புலனாய்வுக்குழு, வெளிநாட்டு ஏற்றுமதி, தேசிய மனித உரிமை ஆணையம், மத்தியத் தலைமைத் தணிக்கையாளர், உள்துறை ஆகிய துறைகளில் அதி காரிகள் மற்றும் ஊழியர்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. மேலும் தபால்துறை, ராணுவப் பொறியியல் உள்ளிட்ட துறைகளில் ஊழியர்களுக்கான குரூப் சி பணியிடங்களும் இந்தத் தேர்வின் மூலமாக நிரப்பப்படுகின்றன. இதில் குரூப் பி பணியிடங்களுக்கு குறைந்தபட்ச வயது 18 ஆகவும், அதிக பட்ச வயது 30 ஆகவும், குரூப் சி பணியிடங்களுக்கு 27 ஆகவும் நிர்ண யிக்கப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு அரசு விதிமுறைகளின் படியான வயது வரம்பு தளர்ச்சிஉண்டு. புகைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்த வழி காட்டுதல்கள் அறிவிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளன. இது குறித்த முழு விபரங்களையும், விண்ணப் பத்தை நிரப்புவதற்கான இணைப்பை யும் பெற https://ssc.nic.in/ என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பங்களை நிரப்பு வதற்கான கடைசித் தேதி - ஜூலை 4, 2025. முதல்நிலைத் தேர்வு நடைபெறும் தேதி - ஆகஸ்டு 13, 2025 முதல் ஆகஸ்டு 30, 2025 வரையில். இரண்டாம் கட்டத் தேர்வு - டிசம்பர் 2025(தேதி பின்னர் அறிவிக்கப்படும்). சந்தேகங்களில் தெளிவு பெற கட்டணமில்லா தொலைபேசி எண் 18003093063 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
பொதுத்துறை வங்கியில் தொழில் பழகுநர்
பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் தொழில் பழகு நர்(Apprentice) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் 4 ஆயிரத்து 500 பணியிடங் களை நிரப்பப் போகிறார்கள். இதில் தேர்வு செய்யப்படுபவர்கள் நாடு முழுவதும் உள்ள சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வின் கிளைகளில் பணி அமர்த்தப்படு வார்கள். கல்வித்தகுதி : பட்டப்படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். வயது : 20 முதல் 28 வரையில் (31.5.2025ன் படி). இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வங்கி விதிமுறைகளின்படி தளர்ச்சி வழங்கப்படும். உழைப்பு ஊதியம் (STIPEND) - மாதம் ரூ.15,000 தேர்வு முறை : ஆன்லைனில் தேர்வு நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெறு பவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப் படும் பணியிடங்களில் அமர்த்தப்படு வார்கள். விண்ணப்பங்களை நிரப்புவதற் கான கடைசித்தேதி ஜூன் 23, 2025 ஆகும். இந்த அறிவிக்கை குறித்த கூடுதல் விபரங்களைப் பெற centralbankof india.co.in என்ற இணையதள முகவரி யிலும், அறிவிக்கையை நேரடியாகப் பெற https://www.centralbankofindia.co.in/sites/default/files/engage ment-of-apprentices-central-bank-fy-2025-26.pdf என்ற முகவரியையும் பார்வையிடலாம்.
பொதுத்துறை பெல்(BEL) பணியிடங்கள்
ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் கணினித்து றைப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை வெளியாகியுள்ளது. சீனியர் சாப்ட்வேர் பயிற்சியாளர் 15, ஜூனியர் சாப்ட்வேர் டிரைனி 15, சாப்ட்வேர் புரபஷனல்ஸ் 10 என மொத்தம் 40 பணியிடங்களை நிரப்ப வுள்ளார்கள். கல்வித்தகுதி : பி.எஸ்சி., அல்லது பி.சி.ஏ., அல்லது பி.இ., அல்லது பி.டெக்., அல்லது எம்.எஸ்சி., அல்லது எம்.சி.ஏ., வயது வரம்பு, தேர்வு முறை உள்ளிட்டவற்றிற்கும், கூடுதல் விபரங்களுக்கும் bel-india.in என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம். விண்ணப்பங்களை நிரப்புவதற்கான கடைசித்தேதி ஜூன் 30, 2025 ஆகும்.