மதுரை, டிச.1 - மதுரை மாவட்டம் மேலூர் வட்டம் கூலானிபட்டியில் உள்ள கருத்தமலை யில் முற்பாண்டியர் காலத்தைச் சேர்ந்த தவ்வை, கொற்றவை சிற்பங்க ளும், பிற்பாண்டியர் கால ஆவுடை யார் பாகம், நந்தி சிற்பங்களும் ஒரே இடத்தில் கண்டறியப்பட்டுள்ளன. மதுரை இயற்கை பண்பாடு அறக் கட்டளை மேற்கொண்ட ஆய்வில் இந்த முக்கிய கண்டுபிடிப்பு வெளிப்பட்டு உள்ளது. 30 ஏக்கர் பரப்பளவில் அமைந் துள்ள கருத்தமலையின் தெற்குப் பகுதியில் 100 அடி உயரமுள்ள கன்னி மார் பாறை உச்சியில் கன்னிமார் கோயில் அமைந்துள்ளது. இக்கோ யிலில் 1300 ஆண்டுகள் பழமையான தவ்வை, கொற்றவை சிலைகளும், 700 ஆண்டுகள் பழமையான வட்ட வடிவ ஆவுடையார், நந்தி, சப்தமாதர்கள் சிற்பங்களும் கண்டறியப்பட்டுள்ளன. அரிட்டாபட்டி மலையிலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் அமைந் துள்ள இப்பகுதியில் 3000 ஆண்டுகள் பழமையான தாய்த்தெய்வ வழி பாட்டின் தொடர்ச்சியாக இச்சிற்பங்கள் காணப்படுகின்றன. பழைய செங்கல் கட்டுமான அடித்தளமும் இப்பகுதி யில் காணப்படுகிறது. கன்னிமார் கோயில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட கி.பி. 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தவ்வை சிற்பம் தலையற்ற நிலையில் மாந்தன், மாந்தி யுடன் அமர்ந்த கோலத்தில் உள்ளது. கருங்கல்லில் செதுக்கப்பட்ட கொற்றவை சிற்பம் மூன்றரை அடி உயரம், இரண்டு அடி நீளமுள்ள கூம்பு வடிவ புடைப்புச் சிற்பமாக காணப்படு கிறது. இப்பகுதியில் காலடி அளவு களுடன் கூடிய மருந்து குழி என்று அழைக்கப்படும் சிறு பள்ளமும் உள்ளது. கி.பி. 7-ஆம் நூற்றாண்டு முதல் 13-ஆம் நூற்றாண்டு வரையி லான காலகட்டத்தைச் சேர்ந்த சிற்பங்கள் கிடைத்துள்ளமை இப்பகுதி யில் தொன்மையான கோயில் இருந்ததை உறுதிப்படுத்துகிறது. இன்றும் வழிபாட்டில் உள்ள இக்கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் தீபம் ஏற்றும் நிகழ்வு நடைபெறுகிறது. அ.வல்லா ளப்பட்டி சின்ன அய்யனார் கோயில் திருவிழாவின்போது குதிரைகள் இக்கோயிலுக்கு எடுத்து வரப்படு கின்றன. மதுரை இயற்கை பண்பாடு அறக்கட்டளையின் கருத்துப்படி, தமிழ்நாட்டில் அதிக தொல்லியல் சின்னங்கள் இருந்தபோதிலும் அவை பாதுகாக்கப்பட்ட சின்னங்களாக அறி விக்கப்படாமலும், முறையாக பரா மரிக்கப்படாமலும் உள்ளன. தொல்லி யல்துறை இப்பகுதியில் விரிவான ஆய்வு மேற்கொண்டு கன்னிமார் கோயிலை பாதுகாக்கப்பட்ட சின்ன மாக அறிவிக்க வேண்டும் என அறக்கட்டளை வலியுறுத்தியுள்ளது. இந்த ஆய்வில் தேவி அறிவு செல்வம் (சிற்பத்துறை ஆய்வாளர்), தமிழ்தாசன் மற்றும் சூழலியல் செயல் பாட்டாளர்கள் பங்கேற்றனர்.