tamilnadu

img

மியான்மரில் சிக்கித் தவித்த 13 பேர் தமிழ்நாடு திரும்பினர்

சென்னை,அக்.5- மியான்மர் மோசடி கும்பலிடம் சிக்கிய தமிழர்களை உடனடியாக மீட்குமாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும், ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதனைத் தொடர்ந்து, முதல்கட்டமாக 13 பேர் மீட்கப்பட்டனர். தாய்லாந்திலிருந்து தில்லி விமான நிலையத்திற்கு கொண்டு  வரப்பட்டனர். அதன்பின் 13 பேரும் புதனன்று (அக் 5) சென்னை விமான நிலையம் வந்த டைந்தனர். வெளிநாட்டு தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார். அதன்பின் செய்தியாளர்க ளிடம் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், “தாய்லாந்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மியான்மருக்கு சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட சுமார் 50 தமிழர்களில் முதல்கட்டமாக 13 பேர் மீட்கப்பட்டு சென்னை வந்தடைந்தனர். மீதம் உள்ளவர் களை அழைத்து வருவதற்கான  நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது”என்றார். மியான்மரிலிருந்து தமிழ்நாடு  வந்தடைந்த கோவை மாவட்டத் தைச் சேர்ந்த ஒருவர் கூறுகை யில், “நாங்கள் துபாயில் வேலைக்கு விண்ணப்பித்தோம். அப்போது தாய்லாந்தில் வேலை இருப்பதாக துபாய் ஏெஜன்ட் எங்களிடம் கூறினார்.  அதை நம்பி அங்கு சென்றோம்.  இருப்பினும் அங்கிருந்தவர்கள் எங்களை ஒரு இடத்தில் வைத் திருந்தனர். சில நாள்களுக்கு பின்பு நாங்கள் சட்டவிரோதமாக மியான்மரில் இருக்கிறோம் என்பது தெரிந்தது. உடல் மற்றும்  மன ரீதியாக பெரிதும் பாதிக்கப் பட்டோம்” என்றார்.

;