tamilnadu

img

அங்கன்வாடி ஊழியர் மாபெரும் பேரணி

மதுரை, டிச.9- அங்கன்வாடி ஊழியர்கள்-உதவி யாளர்கள் சம்மேளனத்தின் 10-ஆவது அகில இந்திய மாநாடு மதுரையில் டிச.6-ஆம் தேதி தொடங்கி டிச.9-ஆம் தேதி நிறைவடைந்தது. இந்த மாநாட்டை இந்திய தொழிற்சங்க மையத்தின் அகில இந்தியத் தலைவர் ஹேமலதா, பொதுச் செயலாளர் தபன்சென், தேசியச் செய லாளர் ஆர்.கருமலையான், தமிழ்நாடு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், செயலாளர் ஜி.சுகுமாறன், அங்கன் வாடி ஊழியர்-உதவியாளர் சம்மேளன அகில இந்தியத் தலைவர் உஷாராணி, பொதுச்செயலாளர் ஏ.ஆர்.சிந்து, தமிழ்நாடு மாநிலத் தலை வர் டி.டெய்சி, செயலாளர் ஆர்.ரத்தின மாலா உட்பட நாடு முழுவதுமிருந்து 650 பிரதிநிதிகள் மாநாட்டில் பங்கேற்றிருந்தனர்.

10-ஆவது அகில இந்திய மாநாட்டில் அகில இந்தியத் தலைவ ராக உஷாராணி, பொதுச் செயலாள ராக ஏ.ஆர்.சிந்து பொருளாளராக அஞ்சுமொய்னி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். துணைத் தலைவர்களாக ஒன்பது பேர், செயலாளர்களாக 13 பேர்,  நிரந்தர அழைப்பாளர்களாக இருவர்,  அகில இந்திய குழு உறுப்பினர்களாக 50 பேர் என மொத்தம் 77 பேர் தேர்வு  செய்யப்பட்டனர். துணைத் தலைவர்கள்: எஸ்.வர லெட்சுமி (கர்நாடகம்), ஜி.பேபிராணி (ஆந்திரம்), இந்திராணி முகர்ஜி (மேற்குவங்கம்), வீணாகுப்தா (உத்தரப்பிரதேசம்), ஜெயாபர்மன் (திரிபுரா), மேரிஜோப் (கேரளம்), சுபா ஷமிம் (மகாராஷ்டிரா), ஹர்ஜித் கௌர் (பஞ்சாப்), ஷிம்ஜிலா(கேரளம்). 

செயலாளர்களாக  கே.சுப்புரா வம்மா (ஆந்திரம்), இந்திராநேவார் (அஸ்ஸாம்), எச்.எச்.சுனந்தா (கர்நாடகம்), கே.கே.பிரசன்னகுமாரி (கேரளம்), கிஷோரிவர்மா (மத்தியப் பிரதேசம்), வீணாஷர்மா (இமாச்சலம்), பி.ஜெயலெட்சுமி (தெலுங்கானா), டி.டெய்சி (தமிழ்நாடு), ஷீலாமண்டல் (மேற்கு வங்கம்), மந்தீப் (பஞ்சாப்), கைலாஷ்ரோஹித் (குஜராத்), ராதாஷன்குர்வார் (மகாராஷ்டிரம்). உறுப்பினர்களாக தமிழகத்தைச் சேர்ந்த ரத்னமாலா, தேவமணி உட்பட  ஐம்பது பேர் தேர்வு செய்யப்பட்டனர். நிரந்தர அழைப்பாளர்கள்: ரத்னா தத்தா (மேற்குவங்கம்), நிலிமா மைத்ரா (ஸ்தாபகத் தலைவர்). 

பேரணி

அகில இந்திய அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் சங்க பத்தாவது அகில இந்திய மாநாட்டு பேரணி மதுரை காள வாசல் பகுதியில் இருந்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்க டேசன் துவக்கி வைத்தார் பேரணி யில் அகில இந்திய தலைவர் உஷாராணி அகில இந்திய பொதுச் செயலாளர் சிந்து சிஐடியு அகில இந் திய செயலாளர் ஒருவரான கருமலை யான் உள்ளிட்ட பல்லாயிரக்கணக் கான கலந்து கொண்டனர்.