சென்னை, நவ.7- தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 14 ஆம் தேதியும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 6 ஆம் தேதியும் தொடங்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்தார். தமிழகத்தில் நடைபெற உள்ள அரசு பொதுத் தேர்வு தேதிகளை பள்ளிக் கல்வி துறை அமைச்சர் திங்களன்று (நவ.7) அறிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 2022 - 2023 ஆம் கல்வியாண்டிற் கான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு 14.3.2023-ல் தொடங்கி 3.4.2023 வரை நடைபெறும். 7,600 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வு எழுது கின்றனர். உத்தேசமாக 3 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட மையங்கள் அமைக்கப்படவுள்ளன. 8.8 லட்சம் பேர் உத்தேசமாக தேர்வு எழுத உள்ளனர். 2022 - 2023 ஆம் கல்வியாண்டிற் கான 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 14.3.2023-ல் தொடங்கி 5.4.2023-ல் வரை நடைபெறும். 7,600 பள்ளி களைச் சேர்ந்த மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். உத்தேசமாக 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட மையங்கள் அமைக்கப்படவுள்ளன. 8.5 லட்சம் பேர் உத்தேசமாக தேர்வு எழுத உள்ளனர். 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 6.4.2023 முதல் 20.4.2023 வரை நடைபெறும். மொத்தம் 12,800 பள்ளிகளைச் சேர்ந்த 10 லட்சம் பேர் தேர்வு எழுத உள்ளனர். இந்த மூன்று பொதுத் தேர்வுகளையும் மொத்தம் 27 லட்சம் பேர் எழுத உள்ளனர். தேர்வு தேதி அறிவிக்கப்பட் டுள்ளதால் மாணவர்கள் உடனடி யாக தங்களின் தயாரிப்பை தொடங்கு வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. வேறு எந்த விசயத்திலும் உங்களின் கவனம் இருக்கக் கூடாது. மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கான நல்ல சூழலை பெற்றோர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் உருவாக்கி தர வேண்டும். மாணவர்கள் அச்சம் இல்லாமல் தேர்வு எழுத வேண்டும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.