மார்க்சிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், இந்திய விடுதலைப் போராட்ட வீரருமான தோழர் என்.சங்கரய்யாவின் 101 ஆவது பிறந்தநாள் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கோவை காந்திபுரம் பகுதியில் கொண்டாடப்பட்டது. இதில், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன் உள்ளிட்ட தலைவர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.