பெய்ரூட்,அக்.5- இஸ்ரேல் ராணுவம் லெபனான் மற்றும் காசாவில் திட்டமிட்டு சுகாதார கட்டமைப்பு கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது என ஐ.நா.வின் மனிதாபிமான விவகாரங்க ளுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது. இஸ்ரேல் ராணுவம் லெபனான் தலை நகர் பெய்ரூட்டில் தாக்குதல் நடத்திய பிறகு தற்போது தரைவழித் தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் அங்கு சுகாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு நாளும் படுகாயமடைந்த மக்களால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன எனவும் தெரிவித்துள்ளது. காசாவில் அத்துமீறி செயல்பட்டது போல இஸ்ரேல் ராணுவம் லெபனானிலும் சர்வ தேச சட்டங்களை மீறி மருத்துவ கட்டமைப்பு கள் மீதும் மருத்துவர்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றது. கடந்த ஆண்டு காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்ததில் இருந்தே ஹிஸ்புல்லா அமைப்பிற்கும் இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே சண்டை நடந்து வருகிறது. அப்போதிருந்தே மருத்துவ கட்டமைப்பு களை இஸ்ரேல் ராணுவம் அழிக்கத் துவங்கி யது. தற்போது வரை லெபனானில் மருத்து வர்கள், சுகாதார ஊழியர்கள் என சுமார் 100 சுகாதாரப்பணியாளர்களை இஸ்ரேல் ராணுவம் படுகொலை செய்துள்ளது. அக்டோபர் 3 அன்று மட்டும் 28 சுகாதாரத் துறை ஊழியர்களை படுகொலை செய்துள்ளது இஸ்ரேல். இதே போல காசா மற்றும் ஆக்கிர மிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மேற்கு கரையில் 850 க்கும் மேற்பட்ட சுகாதாரப்பணியா ளர்களை இஸ்ரேல் படுகொலை செய்துள் ளது குறிப்பிடத்தக்கது.