நெல்லை,நவ.17- மருத்துவத்துறையில் 100 சதவீத காலிப்பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் என்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். நெல்லை மாவட்டத்தில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை மூலம் 1.75 கோடி மதிப்பீட்டில் புதிய மருத்துவ கட்டடங்கள் மற்றும் மருத்துவ பிரிவுகளை திறந்து வைத்து நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி நெல்லை அரசு மருத்து வக் கல்லூரி வளாகத்தில் நடை பெற்றது. இதில் அமைச்சர் மா. சுப்பிரமணியம் கட்டடங்கள் திறந்து வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அமைச்சர் செய்தி யாளர்கள் சந்திப்பில் கூறுகை யில், “திமுக ஆட்சி அமைந்த பின்னர் மருத்துவமனைகளில் கட்டண படுக்கை வசதி அமைக்கும் திட்டங்கள் தொடங்கப்பட்டு மக்கள் மத்தி யில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மட்டும் செயல்பட்டு வந்த இந்த திட்டம் படிப்படியாக மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு பத்தா வது இடமாக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் 18 அறைகள் கொண்ட கட்டண படுக்கை வசதி மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு நபர் தங்கி சிகிச்சை பெறும் வசதி கொண்ட அறைக்கு ஆயிரம் ரூபாய கட்டணம் ஆகவும், இரண்டு பேர் தங்கி சிகிச்சை பெறும் அறைக்கு ரூ. 1500 கட்டணமாகவும், நான்கு பேர் தங்கும் அறைக்கு ரூ.2000 கட்டணமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த அறையில் தொலைக்காட்சி, சுடுதண்ணீர், தனி கழி வறை , சோபா வசதி உள்ளிட்ட வைகள் செய்து கொடுக்கப் பட்டுள்ளது. மேலும் காஞ்சி புரம், கோவில்பட்டி, கன்னி யாகுமரி உள்ளிட்ட பத்து மருத்துவமனைகளில் கட்டண வசதி அறைகள் திறக்கப்படுவதற்கான ஏற்பாடு கள் நடந்து வருகின்றன. 1353 மருத்துவ பணியிடங் கள் தமிழகத்தில் காலியாக உள்ளன. 2026 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கீட்டின் படி மேலும் 1200 மருத்து வர்கள் கூடுதலாக நியமிக்கப் பட வேண்டும். மொத்தமாக 2553 மருத்துவர் காலிப்பணி யிடங்களை நிரப்ப ஜனவரி 27 ஆம் தேதி தேர்வு நடத்தப் பட்டு 100 சதவீதம் மருத்து வர்கள் நியமனம் செய்து முடிக்கப்படும். இரண்டு கட்டமாக தேர்வு? மருத்துவர்கள் தேர்வுக் காக 24000 பேர் விண்ணப் பம் செய்துள்ளனர். அதிகப்படி யான விண்ணப்பம் வந்துள்ள தால் இரண்டு கட்டமாக தேர்வு நடத்தலாமா என ஆலோசனை நடத்தப்படுகிறது. ஆன்லைன் வழியில் இந்த தேர்வை நடத்து வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது போன்று கிராம செவிலி யர்கள் பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டு பணி யாணை வழங்கும் நிலையில் உள்ளது. ஆனால் சிலர் பணிமூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் என வழக்கு தொடர்ந்த நிலையில் அவை நிலுவையில் உள்ளது.வழக்கு தொடர்ந்தவர்கள் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த முன் வந்தால் அவர்களிடம் திறந்த மனதோடு பேச்சுவார்த்தை நடத்தி பணியிடங்களை நிரப்ப தயாராக உள்ளோம். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.