குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் பெ.மூர்த்தி உத்தரவாதம்
மதுரை, ஏப்.15- கவுன்சிலர்கள் மற்றும் செயலர் மிரட்டலால் தற்கொலை செய்து கொண்ட 100 நாள் வேலைத்திட்ட பணித் தளப் பொறுப்பாளர் நாகலட்சுமியின் குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும்;குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பெ.மூர்த்தி உத்தரவாதம் அளித்தார். இதன்பின்னர் அவரது உடலை சனிக்கிழமையன்று அவரது குடும்பத்தினர் பெற்றுக் கொண்டனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள மையிட்டான்பட்டி கிரா மத்தை சேர்ந்தவர் கணேசன் (41). இவ ருடைய மனைவி நாகலட்சுமி (32). இவர்களுக்கு ஐந்து பெண் குழந்தை கள் உள்ளனர். 100 நாள் வேலைத் திட்ட பொறுப்பாளராக வேலை பார்த்து வந்த நாகலட்சுமிக்கு, அதே கிரா மத்தைச் சேர்ந்த கவுன்சிலர்கள் பால முருகன், வீரக்குமார் மற்றும் ஊராட்சிச் செயலாளர் முத்து ஆகியோர் நெருக் கடி கொடுத்துள்ளனர். பணியில் இருந்து விலகும்படி நாகலட்சுமியை மிரட்டியுள்ளனர். இதனால் மனமு டைந்த நாகலட்சுமி ஓடும் பேருந்திலி ருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் உடற்கூராய்விற்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரது உடலை பெற்றுக்கொள்ள மறுத்து கணவர் கணேசன் தனது குழந்தைகள் உறவினர்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தலைமையில் போராட் டம் நடத்தினார். அப்போது எனது மனைவி தற் கொலை செய்துகொள்ளவில்லை. சில ரது நெருக்கடியால் இறந்துவிட்டார். இதுவும் கொலை தான். குற்றவாளி களைக் கைது செய்ய வேண்டும். உரிய நிவாரணம் வழங்கவேண்டும். தனக்கு அரசுப்பணி வழங்க வேண்டும். குழந் தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்க வேண்டுமென வலியுறுத்தினார்.
பாதுகாத்த மார்க்சிஸ்ட் கட்சி
தாயை இழந்து தவித்த ஐந்து பெண் குழந்தைகள், கணவர் கணேசன் உள் ளிட்ட அவரது உறவினர்கள் கடந்த மூன்று தினங்களாக மதுரையிலுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளை யும் கட்சியின் புறநகர் மாவட்டச் செய லாளர் கே.ராஜேந்திரன், மாநகர் மாவட் டச் செயலாளர் மா.கணேசன், மாநி லக்குழு உறுப்பினர்கள் எஸ்.கே. பொன்னுத்தாய், எஸ்.பாலா உள்ளிட்ட கட்சியினர் செய்து கொடுத்தனர். வெள்ளிக்கிழமையன்று மாலை நாகலட்சுமியின் உறவினர்கள், மர ணத்திற்குக் காரணமான குற்றவாளி களைக் கைது செய்ய வேண்டும். மர ணத்திற்குக் காரணமானவர்களை மாரி யாத்தா கேட்பாளா என்றனர். மாரி யாத்தாள் காக்கிறதோ இல்லையோ, மாதர் சங்கமும், கம்யூனிஸ்ட் கட்சி யும் உங்களைக் காக்கும் நம்புங்கள் என மாதர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.கே.பொன்னுத்தாய் குடும்பத்தின ரிடம் உறுதியளித்தார். கடந்த மூன்று தினங்களாக கணே சனின் ஐந்து பெண்களை மாதர் சங்க மத்தியக்குழு உறுப்பினர் எஸ்.கே. பொன்னுத்தாய், நிர்வாகிகள் ஈஸ்வரி, க.பிரேமலதா, சி.மலர்விழி, எஸ்.சரஸ் வதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாமன்ற உறுப்பினர்கள் என்.விஜயா, ஜென்னியம்மாள், அகில இந் திய விவசாயத் தொழிலாளர்கள் சங் கத்தின் மதுரை மாவட்டத் தலைவர் ஜெ.காசி, மாவட்டச் செயலாளர் வி. உமாமகேஸ்வரன் ஆகியோர் அர வணைத்துப் பாதுகாத்தனர்.
தொலைந்து போன மனிதாபிமானம்... கருணை...
திருமங்கலம் காவல்துறை ஆய்வா ளர் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கணேசனை தொடர்பு கொண்டு, உட லைப் பெற்றுக்கொள், உடலைப் பெற்றுக் கொள் என மாறி மாறி மன ரீதியாக அவருக்கு அழுத்தம் கொடுத் துக்கொண்டேயிருந்தனர். ஒரு கட் டத்தில் விரக்தியான அவர், ஐயா நான் எனது குழந்தைகளுடன் மருந் தைக்குடித்து செத்துப்போவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை என அவர் பேசுமளவிற்கு தொந்தரவு கொடுத்தனர். ஒரு அதிகாரி அவரை அழைத்த போது, ஐயா எனது குழந்தைகளு டன் நடுத்தெருவில் நின்று கொண்டி ருந்தேன். எனக்கு அடைக்கலம் கொடுத்துள்ளது கம்யூனிஸ்ட் கட்சிக்கா ரங்க தான். அவுங்க ஆபிசில் தான் உள் ளேன் என்றார்.
அமைச்சர் பெ.மூர்த்தி சொந்த நிதி ரூ.5 லட்சம் உதவி
இந்த நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தங்கி யிருந்த கணேசன் அவரது குழந்தை கள் கட்சித் தலைவர்களுடன் சென்று நாகலெட்சுமியின் உடலைப் பெற்றுக் கொண்டார். உயிரிழந்த நாகலட்சுமியின் உட லுக்கு பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பெ.மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் எஸ். அனீஷ்சேகர், திமுக தெற்கு மாவட்டச் செயலாளர் மணிமாறன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புற நகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்தி ரன், மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் வி.அமிர்தலிங்கம், மாநிலச் செயலாளர் எஸ்.சங்கர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்கள் ஆர்.விஜயராஜன், எஸ்.கே.பொன்னுத்தாய், எஸ்.பாலா,
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ஜெ.காசி, மாவட்டச் செயலாளர் வி.உமாமகேஸ் வரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஏ.வேல்பாண்டி, மாதர் சங்க மாவட்டத் தலைவர் சி.மலர் விழி, மாவட்டச் செயலாளர் க.பிரேம லதா, மாமன்ற உறுப்பினர்கள் என்.விஜயா, வை.ஜென்னியம்மாள், மாவட் டக் குழு உறுப்பினர் மலை.கண்ணன், உள்ளிட்டோர் மாலையணிவித்து மல ரஞ்சலி செலுத்தினர். பின்னர் நாகலட்சுமியின் கணவர் கணேசன், அவரது உறவினர்களுக்கு அமைச்சர் பெ.மூர்த்தி, ஆட்சியர் அனீஷ்சேகர் ஆகியோர் ஆறுதல் கூறி னர். என்ன நடக்கிறது என்று தெரியா மல் தனது தந்தையின் அருகில் அவரது குழந்தைகள் க.சங்கீதா (13), க.விஜய தர்ஷினி (9), க.தேன்மொழி (7), க.சண் முகப்பிரியா (4) மற்றும் பாண்டிஷி வானி (15 மாதக் குழந்தை) நின்றிருந்த னர். அப்போது அமைச்சர் மூர்த்தி ஒவ்வொரு குழந்தைக்கும் தனது சொந்த நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சத்தை வங்கியில் டெபாசிட் செய்வ தாக உறுதியளித்ததோடு இறுதிச் சடங்கு நிகழ்விற்காக ரூ.50 ஆயிரத்தை உடனடியாக வழங்கினார். குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும். குழந்தைகள் பாது காப்பான சூழலில் வளர்வதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்படும். குற்றவாளி கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப் படுமென பத்திரப்பதிவுத்துறை அமைச் சர் பெ.மூர்த்தி உறுதியளித்தார். தொடர்ந்து 4 நாள் போராட்டத்துக்கு பின்பு நாகலட்சுமியின் உடல் அவரது சொந்த ஊரான மையிட்டான்பட்டிக்கு கொண்டு செல்லப்பட்டு பிற்பகல் 3.15 மணியளவில் தகனம் செய்யப்பட்டது.