tamilnadu

img

அசாமில் தொடரும் வெள்ளப்பெருக்கு பத்து மாவட்டங்களில் 1.2 லட்சம் பேர் பாதிப்பு

கவுகாத்தி, ஜூன் 22- அசாம் மாநிலத்தில் தொடரும் வெள்ளப் பெருக்கால் பத்து மாவட்டங்களைச் சேர்ந்த 1.2 லட்சம் மக்கள் பாதிக்கப் பட்டுள்ளனர். மாநிலத்தின் பல பகுதிகளில் இடைவிடாது மழை பெய்து வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம்  ‘ஆரஞ்சு எச்சரிக்கை’ விடுத்துள்ளது.  அடுத்த சில நாட்களில் அசாமின் பல மாவட்டங்களில் ‘மிகக் கன’ மழை பெய்யும் என்று கணித்துள்ளது. கவுகாத்தியில் உள்ள இந்திய வானிலை மையம் மழையின் தீவிரம் அறிந்து வெள்ளிக்கிழமை ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுத்துள்ளது.

பத்து மாவட்டங்கள் 

அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின்  அறிக்கையின்படி, பக்சா, பர்பேட்டா, தர்ராங், தேமாஜி, துப்ரி, கோக்ரஜார், லக்கிம்பூர், நல்பாரி, சோனி த்பூர் மற்றும் உடல்குரி மாவட்டங்களில் 1,19,800 பேர் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ளனர். நல்பாரியில் கிட்டத்தட்ட 45,000 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். பக்சாவில்  26,500 பேர், லக்கிம்பூரில் 25,000 க்கும் அதிக மானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளப் பாதிப்பு கடுமையாக உள்ள ஐந்து மாவட்டங்களில் 14 நிவாரண முகாம்களை அரசு திறந்துள்ளது. இங்கு 2,091 பேர் தஞ்சமடைந்துள்ளனர்.

மீட்பு முயற்சிகள்

ராணுவம், துணை ராணுவப் படை கள், தேசிய பேரிடர் மீட்புப் படை,  தீய ணைப்பு மற்றும் மாவட்ட வரு வாய்த்துறை, தன்னார்வ தொண்டு நிறு வனங்கள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு இடங்களில் இருந்து 1,280 பேரை மீட்டுள்ளனர். வியாழக்கிழமை காலை நிலவரப் படி 780 கிராமங்கள் தண்ணீரில் மூழ்கி யுள்ளன, அசாம் முழுவதும் 10,591.85 ஹெக்டேர் பயிர்கள் சேதமடைந்துள்ளன என வானிலை மையம் தெரிவித்துள்ளது. பக்சா, பர்பேட்டா, சோனித்பூர், துப்ரி, திப்ருகர், காம்ரூப், கோக்ரஜார், லக்கிம்பூர், மஜூலி, மோரிகான், நாகோன், தெற்கு சல்மாரா, உடல்குரி ஆகிய இடங் களில் மண் அரிப்புகள் ஏற்பட்டுள்ளன.  திமா  ஹசாவோ மற்றும் காம்ரூப் பெருநகரில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.  பக்சா, நல்பாரி, பர்பேட்டா, சோனித்பூர், போங்கைகான், தர்ராங், சிராங், துப்ரி, கோல்பாரா, கம்ரூப், கோக்ர ஜார், லக்கிம்பூர், நாகோன், உடல்குரி, தேமாஜி மற்றும் மஜூலி ஆகிய இடங்களில் வெள்ளப்பெருக்கால் கரை கள், சாலைகள், பாலங்கள் சேத மடைந்துள்ளன. பார்பெட்டா, தர்ராங், காம்ரூப் பெருநகரம், கோக்ரஜார் மற்றும் நல்பாரி மாவட்டங்களில் நகர்ப்புறப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பிரம்மபுத்திரா ஆற்றின் கிளை நதியான பெக்கியில் மூன்று இடங்களில் அபாய அளவைத் தாண்டி தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.