tamilnadu

img

இராமநாதபுரத்தில் 1,000 ஹெக்டேர் மிளகாய் பயிர்கள் பூஞ்சை நோயால் பாதிப்பு

 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 ஆவது அகில இந்திய மாநாடு மதுரையில் ஏப்ரல் 2 முதல் 6 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்கான நிதி 10 லட்சம் ரூபாய் கட்சியின் திருநெல்வேலி மாவட்டக்குழு சார்பில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.கனகராஜிடம் மாவட்டச் செயலாளர் க.ஸ்ரீராம் வழங்கினார் .

இராமநாதபுரத்தில் 1,000 ஹெக்டேர் மிளகாய் பயிர்கள் பூஞ்சை நோயால் பாதிப்பு

இராமநாதபுரம் மாவட்டத்தில் டிசம்பர் 2024, மார்ச் 2025 வரை பெய்த மழையால் 1,000 ஹெக்டேர் பரப்ப ளவில் முண்டு வகை மிளகாய் பயிர்கள் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள் ளன. இதனால் விவசாயிகள் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மாநில அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இராமநாதபுரம் மாவட்டத்தில் 11,500 ஹெக்டேரில் மிளகாய் பயிரிடப் படுகிறது. டிசம்பர் 2024 மழையில் 9,200 ஹெக்டேர் பரப்பு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.  தொடர்ந்து மார்ச் மாத மழையால் புதிதாக நடப்பட்ட மிளகாய் பயிர்களும் பாதிப்புக்குள்ளா கின. குறிப்பாக கமுதி, கடலாடி, முது குளத்தூர், திருப்புல்லாணி, பரமக்குடி உழுத பகுதிகளில் மிளகாய் பயிர்கள் மிக மோசமான அளவில் பாதிக்கப் பட்டுள்ளன.  இதுதொடர்பாக முதுகுளத்தூர் விவசாயி எம். ராமானுஜம் கூறுகையில்,”டிசம்பர் மழையில் நூற்றுக்கணக்கான ஹெக்டேர் மிள காய் பயிர்கள் அழிந்தன. ஜனவரியில் புதிய நாற்றுகள் நடப்பட்டன. ஆனால் அறுவடைக்கு முன் மார்ச் மழையால் ஈரப்பதம் அதிகரித்து மிளகாய் பயிர்க ளில் பூஞ்சை நோய் பரவியது. இப்போது கிடைக்கும் மிளகாயிலி ருந்து ரூ.25,000 மட்டுமே கிடைக்கும். அதேநேரம் செலவு ரூ. 1 லட்சம் ஆகும்” என கவலையுடன் கூறினார்.  இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கைகள் இதுதொடர்பாக தோட்டக்கலைத் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகை யில்,“இராமநாதபுரம் மாவட்டத்தில் 1,000 ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன” என அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் சாதி மோதல்கள் அதிகரிப்பு பட்டியலின ஆணையத் தலைவர் எச்சரிக்கை

வடமாநிலங்களை விட தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சாதி சார்ந்த மோ தல்கள் அதிகமாக உள்ளதாக தமிழ்நாடு மாநில பட்டியலின மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் தலைவர் டாக்டர் எஸ். தமிழ்வாணன் குற்றம் சாட்டியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவை குண்டம் அருகே கொடூரமாக தாக்கப்பட்ட பட்டியலின வகுப்பைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவரை நேரில் சென்று பார்வையிட்ட பிறகு எஸ்.தமிழ் வாணன் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செய்தியா ளர்களிடம் பேசுகையில்,”11ஆம் வகுப்பு பட்டியலின வகுப்பைச் சேர்ந்த மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் ஆழ்ந்த கவலையை  ஏற்படுத்துகிறது. மருத்துவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் முயற்சியால் மாண வரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இடது கை யில் இரண்டு விரல்கள் துண்டிக்கப்பட்டு, தலையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. விலா எலும்புகள், மூளை, நுரையீரல் ஆகி யவைகளும் சேதமடைந்துள்ளன. சாதி வகையிலான  இந்த கொலை முயற்சியை நாகரிக சமூகம் ஒருபோதும் ஏற்றுக்கொள் ளாது. பாதிக்கப்பட்ட மாணவரைப் பார்த்த போது நாங்கள் அழுதோம். மாணவருக்கு இலவசக் கல்வி மற்றும் அரசு வேலை வழங்க ஆணையம் பரிந்து ரைக்கும். சுதந்திரப் போராட்ட வீரர்கள் மூலம்... பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்று சாதி பிரச்சனைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற் படுத்தியுள்ளோம். இப்போதெல்லாம் மக்கள் சுதந்திரப் போராட்ட வீரர்களை தங்கள் சாதியின் தலைவர்களாகக் காட்டி சாதிப் பெருமையை வெளிப்படுத்து கின்றனர். இதன் மூலமாகவும் சாதி வன்முறை அதிகரிக்கிறது” என அவர் எச்சரிக்கை விடுத்தார்.