tamilnadu

img

மக்களின் வாழ்நிலை மாறாமல் ‘வளர்ச்சி’ என்பது கட்டுக்கதையே!

மக்களின் வாழ்நிலை மாறாமல் ‘வளர்ச்சி’ என்பது கட்டுக்கதையே!

பிரபல மார்க்சிய பொருளாதார வல்லுநர் பேரா.பிரபாத் பட்நாயக், பீப்பிள்ஸ் டெமாக்ரசி (ஜூன் 1, 2025) இதழில் வெளியான தனது “Economics and the Concept of Progress” ‘பொருளாதாரமும் வளர்ச்சி பற்றிய கோட்பாடும்’ என்ற கட்டுரையில், நாட்டின் முன்னேற்றத்தை மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) அடிப்படையில் மட்டும் அளவிடுவது முற்றிலும் தவறான அணுகுமுறை என்று கடுமையாக விமர்சித்துள்ளார். வரலாற்றுப் பின்னணியும் பொருளாதாரச்  சிந்தனை மாற்றமும் 17-18ஆம் நூற்றாண்டு பொருளாதார வல்லுநர்கள்  ஒரு நாட்டின் செல்வத்தை அந்த நாட்டிடம் உள்ள தங்கம், வெள்ளி போன்ற விலையுயர்ந்த உலோகங்களின் அளவை வைத்தே அளவிட்டனர். இவர்களுக்கு எதிராக ஆடம் ஸ்மித் தனது “தி வெல்த் ஆப் நேஷன்ஸ்” நூலை எழுதினார்.  ஆடம் ஸ்மித் ஒரு நாட்டின் செல்வம் என்பது தங்கம், வெள்ளி அல்ல; மாறாக அந்த  நாட்டிடம் உள்ள மூலதன சேமிப்பின் அளவு தான் என்று வாதிட்டார். இந்த மூலதன சேகரிப்பை அதிகரிக்க அரசின் தலையீடுகளை குறைத்து (laissez faire), சுதந்திர சந்தைப் பொருளாதாரத்தை  நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறினார். கிழக்கிந்திய கம் பெனி போன்ற ஏகபோக வணிக நிறுவனங் களின் பிடியிலிருந்து அரசை விடுவிக்க வேண்டும் என்றார். இதை விவரிக்கும் பேரா.பிரபாத் பட்நாயக்,  ஆடம் ஸ்மித் புரட்சிகர மாற்றத்தை கொண்டு வந்த போதிலும், அவரும் மக்களிலிருந்து பிரிந்து நிற்கும் ‘தேசத்தின்’ செல்வத்தையே முக்கியமானதாக கருதினார். வெஸ்ட்ஃபேலி யன் உடன்படிக்கைக்கு பின்னர் ஐரோப்பாவில் வளர்ந்த முதலாளித்துவ தேசியவாதத்தின் அம்சம் இது. டேவிட் ரிக்கார்டோ மற்றும் ஜான் ஸ்டூவர்ட் மில் மற்றொரு முதலாளித்துவ பொருளாதார வல்லுநரான டேவிட் ரிக்கார்டோவும் ஆடம் ஸ்மித்தின் அதே கருத்தை கொண்டிருந்தார். மூலதன சேகரிப்பு நின்றுவிடும் ‘நிலையான நிலை’ (stationary state) வரும் என்ற அவரது பயம், மூலதனமே நாட்டின் செல்வம் என்ற கருத்தாக்கத்திலிருந்தே எழுந்தது.  இவர்களில், மற்றுமொரு பொருளாதார வல்லுநர் ஜான் ஸ்டூவர்ட் மில் மட்டும் விதி விலக்கு. தொழிலாளர்களின் நலன் மேம்பட்டால் நிலையான நிலையைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்றார்.  இதற்கு காரணம் அவரது மனைவி ஹாரியட் தாக்கத்தால் அவர்  சோசலிச சிந்தனையை நோக்கி நகர்ந்ததே. மால்தசின் மக்கள் தொகை கோட்பாடு பேரா.பிரபாத் பட்நாயக் மேலும் விளக்குகிறார்: ஸ்மித் மற்றும் ரிக்  கார்டோ ஆகியோர் தொழிலாளர்கள் மீது அனுதாபம் கொண்டி ருந்த போதிலும், மால்தசின் மக்கள் தொகை கோட்பாட்டை நம்பினர். தொழிலா ளர்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட்டால் அவர்கள் அதிக பிள்ளைகளை பெற்றுக்கொள் வார்கள், இதனால் மீண்டும் அவர்களது வாழ்க்கைத் தரம் குறைந்துவிடும் என்று நம்பினர். எனவே கொள்கை நிர்ணயம் மூலதன சேகரிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்று கருதினர். நவீன முதலாளித்துவ பொருளா -தாரத்தின் கருத்தியல் சார்பு  மால்தசின் இக்கோட்பாட்டை “மனித இனத்தின் மீதான அவதூறு” என்று மாமேதை காரல் மார்க்ஸ் விமர்சித்தார். இந்த கோட்பாடு நீண்ட காலம் முன்பே நிராகரிக்கப்பட்டுவிட்டது.  மால்தசின் கோட்பாடு தவறு என்று நிரூபணமான பின்னரும், இன்றைய பிரதான முதலாளித்துவ பொருளாதார வல்லுநர்கள் இன்னும் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) அளவையும் அதன் வளர்ச்சி விகிதத்தையும் மட்டுமே ‘தேச’ செழிப்பின் அளவுகோலாக கருதுகின்றனர். இது வெறும் கருத்தியல் சார்பு மட்டுமே. நிதி ஆயோக் அறிவிப்பின் மீதான விமர்சனம் நிதி ஆயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரி அண்மையில் “இந்தியா இப்போது உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளது, ஜப்பானை முந்தி 4 டிரில்லியன் டாலர் ஜிடிபியை எட்டியுள்ளது” என்று பெருமையுடன் அறிவித்தார். இந்திய பெரு வணிகப் பிரிவினர் இதைப் பாராட்டினர். பேரா.பிரபாத் பட்நாயக்கின் கடுமையான விமர்சனம்  இதை தமது கட்டுரையில் சுட்டிக்காட்டியுள்ள பேரா.பிரபாத் பட்நாயக்,  - இந்தியாவின் மக்கள்தொகை ஜப்பானை விட 10 மடங்கு அதிகம் என்பதை அதிகாரி குறிப்பிடவில்லை; - இது மோடியின் “இந்தியா விரைவில்  5 டிரில்லியன் டாலர் டிஜிபியை அடையும்” என்ற கூற்றுக்குச் சமம்; -     நாட்டின் அளவை கணக்கில்கொள்ளாமல் முற்றிலும் ஜிடிபியை ஒப்பீடுசெய்வது அர்த்தமற்றது; என்று அவர் குறிப்பிட்டுள் ளார்.  ஜனநாயகத்திற்கு எதிரான அணுகுமுறை ஜனநாயக சமுதாயத்தில் மக்களின் வாழ்க்கை நிலைமை தான் முக்கியம். முன்னேற்றம் என்பது மக்களின் வாழ்க்கைத் தரம் எந்த அளவுக்கு மேம்படுகிறது என்பதை வைத்து மட்டுமே அளவிடப்பட வேண்டும்.  இந்த ஜிடிபி பெருமை பேசும் அணுகு முறை நமது விடுதலைப் போராட்டத்தின் நோக்கத்திற்கு முற்றிலும் எதிரானது. விடு தலைப் போராட்டம் ‘தேசத்தின்’ விடுதலையை மக்களின் விடுதலையுடன் ஒருங்கிணைத்துப் பார்த்தது என விவரிக்கும் பிரபாத் பட்நாயக், “இந்தியாவின் உண்மை நிலை சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்கு மேலான காலத்திற்கு பின்னரும் மோசமாகவே உள்ளது.  2024இல் உலக பசி குறியீட்டில்  (Global Hunger Index) 127 நாடுகளில் இந்தியா 105ஆவது இடத்தில் உள்ளது. இந்த வெட்கக் கேடான உண்மையை வைத்து அரசு வெட்கப்பட வேண்டும். ஆனால் மாறாக ஜிடிபி அளவை வைத்து பெருமை பேசுகிறது” என்று சாடியுள்ளார்.