மணிப்பூரில் காவல்துறை சோதனையில் 287 கோடி மதிப்பிலான 72 கிலோ போதைப்பொருள் (பிரவுன் சுகர்) பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மணிப்பூர் பகுதியில் அசாம் சிறப்பு காவல்துறை அதிகாரிகள் மற்றும் மணிப்பூர் காவல்துறையினர் கூட்டு சோதனை நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்துள்ளனர். நவ.,10 ஆம் தேதி பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்ய போதைப்பொருள்கள் கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து அந்த பகுதிகளில் காவல்துறையினர் சோதனைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 72 கிலோ (பிரவுன் சுகர்) போதைப்பொருளை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதன் சந்தை மதிப்பு 287 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காவல்துறை சோதனை மேற்கொண்ட இடத்தில் கடந்த மாதத்தில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.