மகாராஷ்டிரா ராஜுரா தெஹ்ஸில் பகுதியில் புலியால் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், அருகில் உள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும், விவசாய விவசாய வேலைகளை பாதித்துள்ளது. கடந்த ஜனவரி முதல் எட்டு நபர்களையும், 25 கால்நடைகளையும் புலிகள் கொன்றுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், புலிகளை பிடிக்க 150 பேர் பணியாளர்கள் கொண்ட குழு அமைக்க உத்திர விடப்பட்டுள்ளது. விரைவில் புலிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அப்பகுதி விவசாயிகளை காப்பாற்ற புலியை சுட்டுக் கொல்ல வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
வனத்துறையின் தரவுகளின்படி, கடந்த ஆண்டு ஜனவரி 18 ஆம் தேதி கம்பாடாவில் புலி ஒருவரைக் கொன்றது, பின்னர் மற்றொருவர் நவம்பர் 25 மற்றும் டிசம்பர் 25 ஆம் தேதிகளில் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து ஜனவரி 4, மார்ச் 6, ஆகஸ்ட் 18, செப்டம்பர் 25 மற்றும் அக்டோபர் 2020 ஆகிய தேதிகளில் கொல்லப்பட்டுள்ளனர்.