மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 74 போலீசார் உயிரிழந்த சம்பவம் காவல் துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலம் கொரோனா பாதிப்பில் முதல் இடத்தில் உள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் ஊரடங்கு மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிராவில் கடந்த 48 மணிநேரத்தில் 222 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 74 ஆக உயர்ந்து உள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 4,714 பேர் குணமடைந்து வீட்டுக்கு திரும்பி உள்ளனர். இதனையடுத்து, மகாராஷ்டிரா காவல் துறையில் மட்டும் கொரோனா பாதிப்புக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 5,935 ஆக உயர்ந்து உள்ளது.