மும்பை கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் தானேவில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் பிவண்டி பகுதியில் இருந்த 3 மாடி கட்டிடம் திங்களன்று அதிககாலை எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புக்குழுவினர் தொடர்ந்து 4 நாட்களாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் தற்போதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.