tamilnadu

img

மகாராஷ்டிராவில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு

கோவிட்-19 பரவல் காரணமாக, மகாரஷ்டிராவில் ஊரடங்கு வரும் ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட தகவலின்படி, இந்தியாவில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,48,318 ஆக உயர்ந்துள்ளது. நாட்டில் அதிக தொற்று உள்ள மாநிலமாக மகாராஷ்டிரா இருக்கிறது. இன்று நிலவரப்படி, அம்மாநிலத்தில் 1,64,626 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 7,429 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சூழலில், நோய் தொற்று மேலும் பரவாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு வரும் ஜூலை 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

;