tamilnadu

img

நாயை துரத்தி வந்து வீட்டுக்குள் புகுந்த சிறுத்தை

மகாராஷ்டிராவில் நாயை துரத்தி வந்த சிறுத்தை குடியிருப்புப் பகுதிகளில் உள்ள ஒரு வீட்டிற்குள் புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மகாராஷ்டிரா மாநிலத்தின் அகமதுநகர் மாவட்டம் பிம்பல்கன் ரோடா கிராமத்தைச் சேர்ந்தவர் திலீப். கடந்த சனிக்கிழமை இரவு திலீப்பின் வளர்ப்பு நாயை துரத்தி வந்த சிறுத்தை ஒன்று, அவரது வீட்டிற்குள் புகுந்துள்ளது. இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து, அலறியடித்து வெளியே ஓடினர். நாயும் பின்பக்க கதவு வழியாக வெளியே ஓடிவிட்டது. இதையடுத்து திலீப் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் 4 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். 4 வயதான அந்த சிறுத்தை பின்னர் வனப்பகுதியில் பாதுகாப்பாக கொண்டு விடப்பட்டது.


 

;