கழிவறை குறித்தெல்லாம் என்னிடம் பேசக்கூடாது என மத்திய அமைச்சர் பிரக்யா சிங் தாக்கூர் சர்ச்சையை ஏற்படும் வகையில் பேசி உள்ளார்.
மலேகான் குண்டு வெடிப்பு சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட பிரக்யா சிங் தாக்கூர் கடந்த மக்களவைத் தேர்தலில் மத்தியப் பிரதேச மாநிலம் போபால் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் சமீபத்தில் தனது தொகுதிக்கு உட்பட்ட செஹோர் பகுதியில் பாஜக தொண்டர்களிடையே பேசினார். அப்போது, “உங்களது கழிவறைகளை சுத்தம் செய்ய நான் எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்படவில்லை. நான் எந்த காரணத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளேனோ அதைச் சரிவர செய்வேன் என்றார்.
மற்றபடி உங்கள் பகுதியில் உள்ள இதுபோன்ற சிறுசிறு பிரச்சினைகளை அதற்கான உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து முடித்துக் கொள்ளுங்கள். சாதாரண பிரச்சினைகளுக்கு எல்லாம் என்னை தொலைபேசியில் அழைக்காதீர்கள்” என்றார்.
மோடி தலைமையிலான அரசு தூய்மை இந்தியா திட்டத்திற்கு முன்னுரிமை தருவதுபோல் மக்களிடையே காட்டிக்கொள்ளும் சூழலில் பாஜக எம்.பி. சுகாதாரப்பணியை கண்டு கொள்ளாமல் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.