tamilnadu

img

புனே:ரயில் நிலையம் அருகே கையெறி குண்டு போன்ற பொருள் கண்டுபிடிப்பு

புனே ரயில் நிலையம் அருகே கையெறி குண்டு போன்ற பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. 
மகாராஷ்டிர மாநிலம் புனே ரெயில் நிலையம் அருகே நேற்று வழக்கம் போல் ஒரு துப்புரவு பணியாளர் பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு ஒரு கை எறி குண்டை போன்ற பொருள் இருப்பதை கண்டுபிடித்தார். இதையடுத்து ரயில்வே காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வெடிகுண்டை அகற்றி அதனை செயல் இழக்கச் செய்தனர். மேலும் அதன் பாகங்கள் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது.