tamilnadu

img

மகாராஷ்டிராவில் தீ விபத்து -5 பேர் பலி

மகாராஷ்டிராவில் துணிக்கடை ஒன்றில் நடந்த தீ விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே உள்ள கிராமத்தில், ஆடைகள் வைக்கப்பட்டு இருந்த குடோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. எதிர்பாராத விதமாக நடந்த இந்த தீ விபத்தில் சிக்கி 5 தொழிலாளர்கள் பலியாகினர்.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும், 4 வாகனங்களில் விரைந்து வந்த தீ அணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர் இதைத்தொடர்ந்து தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.