மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் 26 பேர் காயமடைந்துள்ளனர்
மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த சில தினங்களாக இடி மின்னலுடன் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மகாராஷ்டிரத்தின் தானே மாவட்டத்தின் கிராமப்புறங்களில் நேற்று மின்னல் தாக்கியதில் 22 பேர் காயமடைந்துள்ளனர். இதற்குமுன் இரண்டு வெவ்வேறு கிராமங்களில் மின்னல் தாக்கிய சம்பவத்தில் ஒருவர் பலியாகினார், மேலும் 4 பேர் காயமடைந்தனர்.
இதன்மூலம் மின்னல் தாக்கிய சம்பவங்களில் காயமடைந்தோர்களின் மொத்த எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.