மகாராஷ்டிரா மாநிலத்தில் 106 வயது மூதாட்டி கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தை சேர்ந்த 106 வயது மூதாட்டி கொரோனா தொற்றில் மீண்டுள்ளார். இன்று அவரை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.அவருக்கு தொடர்ந்து 10 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. எந்தவொரு மருத்துவமனையும் ஆரம்பத்தில் தனது வயது காரணமாக அவரை அனுமதிக்கத் தயாராக இல்லை. சவ்லாரம் கிருதா சங்குலில் (விளையாட்டு வளாகத்தில்) கல்யாண் டோம்பிவ்லி முனிசிபல் கார்ப்பரேஷன் (கே.டி.எம்.சி) அமைத்த கொரோனா சிகிச்சைக்காக 10 நாட்களுக்கு முன்பு அவர் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவர் வயது பொருத்து அதிக கவனத்துடன் சிகிச்சை அளித்துள்ளனர்.
இந்த சிகிச்சை வசதிகளை ஒரு ரூபாய் கிளினிக் என்ற மருத்துவமனையினர் மேற்கொண்டனர். கடந்த ஜூலை 27 ஆம் தேதி துவங்கப்பட்ட இந்த மருத்துவமனையில் இதுவரை ஆயிரத்து 100 கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளனர். இந்த மருத்துவமனையில் நோயாளிகளிடம் ஒரு ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூல் செய்யப்படுவதாக மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மருத்துவர் ராகுல் குலே கூறியுள்ளார்.