பொள்ளாச்சி, செப்.19- கோவை மாவட்டம், பொள்ளாச்சி தாலுகா அலுவலக வளாகத்தில் கருவூலம் அலுவலகம், நீதிமன்றங்கள், தாலுகா அலு வலகம், பொள்ளாச்சி கிளை சிறை, அரசு இ-சேவை மையம் என பல அரசு அலுவல கங்கள் அமைந்துள்ளது.
இப்பகுதியில் காவல் துறையால் பறிமுதல் செய்யப் பட்ட 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் மற் றும் குப்பைகள் ஆண்டு கணக்கில் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. இதனால், மழைக்கா லங்களில் மழைநீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகும் வாய்ப்புள்ளது.
எனவே, உடனடியாக குப்பைகளையும், பல ஆண்டு களாக நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்க ளையும் அப்புறப்படுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.