தரங்கம்பாடி, ஜூலை 29- மயிலாடுதுறை கோட்டத்திற்குட்பட்ட அரசு பள்ளிகளில் கடந்த மூன்று ஆண்டுகளாக படித்து முடித்த மாணவர்க ளுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படவில்லை. மாணவர்க ளுக்கு வழங்கப்பட வண்டிய லேப்டாப்கள் எங்கே? என்ற முழ க்கத்துடன் இந்திய மாணவர் சங்கத்தின் தலைமையில் மயிலா டுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாணவர்கள் மயிலாடுதுறை கோட்டாட்சியரி டம் மனு கொடுத்து, கடந்த மூன்று ஆண்டு மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கிட வலியுறுத்தினர். வட்டச் செயலாளர் குமரே சன் தலைமையில் வாலிபர் சங்க வட்ட செயலாளர் அறிவழ கன் பங்கேற்றார்.