tamilnadu

img

போட்டித் தேர்வு மாணவர்களுக்கு வசதியாக நூலக புத்தகங்கள் அதிகளவு வழங்க கோரிக்கை

பொன்னமராவதி, பிப்.21- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே ஒலியமங்கலதில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமிற்கு மாவட்ட வரு வாய் அலுவலர் சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட துனை ஆட்சியர் ஸ்ரீகிருஷ்ணன், இலூப்பூர் ஆர்.டி.ஓ டெய்சிகுமார் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சங்கரகாமேஷ்வ ரன், வேளாண் உதவி இயக்கு னர் சிவராணி, வட்டார கல்வி அலுவலர் ராஜா சந்திரன் பேசினர். முகாமில், முதியோர் உதவித் தொகை உள்ளிட் டவை கோரிய 258 பயனாளி களுக்கு 32.5 லட்சம் மதிப்பி லான நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. தாசில்தார் திருநாவுக்கரசு, ஒன்றிய கவுன்சிலர் சிவரஞ்சனி வினோத்குமார், வருவாய் ஆய்வாளர் இளஞ்சியம், கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் முகாமில், காட்டு விலங்குகளிடத்திலிருந்து பயிர்களை பாதுகாக்க வனத் துறை சார்பில் கம்பி வேலி அமைக்க வேண்டும். போட்டித் தேர்வுகளில் மாண வர்கள் பங்கேற்க வசதியாக இங்குள்ள நூலகத்தில் அதிக அளவு புத்தகங்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை பொது மக்கள் முன்வைத்தனர். முன்னதாக ஊராட்சி தலைவர் சோலையம்மாள் வரவேற்றார்.