tamilnadu

img

நூறு நாள் வேலையை 200 நாளாக உயர்த்துக! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரச்சார இயக்கம்

சீர்காழி, ஆக.27- மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் பல்வேறு ஊர்களின் கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  சார்பில் 100 நாள் வேலையை 200 நாள் ஆக உயர்த்தி தினசரி சம்பளத்தை ரூ.600 ஆக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடை பெற்றது.  பச்சை பெருமாநல்லூரில் வட்ட குழு உறுப்பினர் கே.கேசவன் தலைமையிலும், கொள்ளிடம் மாம்பட்டு கடைவீதியில் வட்ட குழு உறுப்பினர் பி. விஜய் தலைமையிலும், சீயாளத்தில் கிளைச் செய லாளர்கள் அய்யாசாமி தலைமையிலும், வைத்தீஸ்வ ரன் கோயில் கடைவீதியில் மருவத்தூர் கிளைச் செயலாளர் கரிகாலன், ஆலாலசுந்தரம் கிளைச் செய லாளர் சேகர் தலைமையிலும், அளக்குடியில் குஞ்சு தலைமையிலும், ஆச்சாள்புரத்தில் லட்சுமணன் தலைமையிலும் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டங்களில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஏ.வி.சிங்காரவேலன், சி.விஆர்.ஜீவானந்தம், கே.நாகையா உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். பொறையாரில் தெருமுனைக்கூட்டம்  வட்டக்குழு உறுப்பினர் காபிரியேல் தலைமையில் நடைபெற்றது. வட்ட செயலாளர் பி.சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் துரைராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் டி. சிம்சன், வட்டக்குழு உறுப்பினர் குணசேகரன் உரை யாற்றினர்.   அரியலூர் அரியலூர் மாவட்டம் திருமானூர் பேருந்து நிலை யத்தில் கட்சியின் ஒன்றியச் செயலாளர் எஸ்பி.சாமி துரை தலைமையில் பிரச்சாரக் கூட்டம்- ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். இளங்கோவன் துவக்கி வைத்தார். மாநிலக் குழு உறுப்பினர் எம்.சின்னதுரை கண்டன உரை நிகழ்த்தி னார். மாவட்டக்குழு சௌரிராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆண்டிமடம் கடைவீதியில் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.மகாராஜன் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டக் குழு உறுப்பி னர் இளவரசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் வீடு வீடாகச் சென்று துண்டுபிரசுரம் விநியோ கித்தனர்.