tamilnadu

img

சுடுகாட்டில் குப்பை கொட்டுவதை எதிர்த்து பொதுமக்கள் சாலை மறியல்

கும்பகோணம், ஜன.24- தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதி யில் 45 வார்டுகள் உள்ளன. இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் இறந்தால் பெருமான்டி பகுதி பொது சுடுகாட்டில் அடக்கம் செய்து வரு கின்றனர். இந்நிலையில் கும்பகோணம் பகுதியில் சேரும் குப்பைகளை பெரு மாண்டி சுடுகாட்டிற்குள் குப்பைகளை கொட்டி குப்பைக் கிடங்கு உருவாக்க நகராட்சி திட்டமிட்டுள்ளது. இதனால் குப்பைகளை கொட்டு வதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்பகுதி கவுன்சிலர் சுரேஷ், சிபிஎம் நகர செயலா ளர் செந்தில்குமார், நகர குழு உறுப்பினர் நாகராஜன் மற்றும் பொதுமக்கள் ஏராள மானோர் கலந்து கொண்டு மறியலில் ஈடு பட்டனர்.

;