சென்னை, ஆக.3- அரசு ஊழியர்களுக்கான பண்டிகைக்கால முன்பணத்தை 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்துவ தற்கான அரசாணை வெளி யிடப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர் கள், ஆசிரியர் அல்லாத பணியா ளர்களுக்கு பண்டிகைக் கால முன்பணமாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், சட்டமன்றத்தில் நிதித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்குப் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்ட துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அரசு ஊழியர்கள், ஆசி ரியர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இதற் கான அரசாணையை நிதித்துறை முதன்மை செயலாளர் வெளி யிட்டுள்ளார். தொகையை உயர்த் தினாலும், பண்டிகைக்கால முன் பணத்தை பெறுவதற்கான நடை முறைகளில் எந்த மாற்றமும் இல்லை என்றும், இனி வரும் பண்டிகை கள் அனைத்துக்கும் இந்த உத்த ரவு பொருந்தும் என்றும் அர சாணையில் குறிப்பிடப்பட்டுள் ளது.