tamilnadu

2000 ஹெக்டேர் வனத்துடன் இணைக்கும் முயற்சியை தடுக்கக் கோரி முதல்வருக்கு மனு

வேலைவாய்ப்பை பறிக்கும் அரசு ரப்பர் கழகம்:

நாகர்கோவில், ஆக.7- கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு ரப்பர் கழக பகுதியில் 2000 ஹெக்டர் வனத்தில் இணைப்பு நடவ டிக்கையை கைவிட்டு ரப்பர் கழகத்தை பாதுகாத்திட வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு அரசு ரப்பர் கழக அனைத்து சங்க ஒருங்கிணைப்பு குழு சார்பில் அனுப்பியுள்ள மனு விபரம் வருமாறு: தமிழக அரசின் வனத்துறையின் கீழ் செயல்படும் அரசு ரப்பர் கழ கத்தில் தற்பொழுது ஏற்பட்டுள்ள பிரச்சனை குறித்து அரசு கவனத்தில்  கொண்டுவருவதோடு தீர்வுகாணவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். 1956 நவம்பர் 1 ஆம் தேதி வரை இன்றைய கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கூர் அரசின் பகுதியாக இருந்தது. இப்பகுதி தமிழ்நாட்டுடன் இணைக்கபட்ட பின்பு மலையோர பகுதி மக்களுக்கு தொழில் வாய்ப்பு உருவாக்கிட தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்கள் மூலமாக அன்றய மாநில அரசு கன்னியாகுமரி மாவட் டத்தில் வடக்கு பகுதிலுள்ள தோவாளை, கல்குளம் தற்பொழுது (திருவட்டார்) விளவங்கோடு பகுதிக ளிலிருந்து சுமார் 5000 ஹெக்டேர் நிலம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகு தியில் ஒதுக்கப்பட்டது.

அரசு ஒதுக்கிய பகுதியில் ரப்பர் நடவு செய்யப்பட்டு தொடர்ந்து 1963 ஆம் ஆண்டு முதல் முறையாக கீரிப் பாறையில் உற்பத்தியும் தொடங்கி யது. அரசு தோட்ட பகுதி உலகத்தில் முதல்தர ரப்பர் பகுதி என்று இந்திய அரசின் ரப்பர் வாரியமும் அங்கீக ரித்துள்ளது. தமிழக அரசின் ரப்பர் தோட்ட நிறுவனத்தை தொடர்ந்து சமீப காலமாக உயர் அதிகாரிகள் மட்டத்தில் அழிக்கும் முனைப்பில் செயல்பட்டு வருகிறார்கள். ரப்பர் பால் உற்பத்தி செய்த பகுதியை முதலில் மருதம்பாறையில் தேர்வு செய்து வனத்துறையில் திருப்பி வழங்கப் பட்டது. தொடர்ந்து கோதையார், மைலார், கீரிப்பாறை என ஒவ்வொரு பகுதியிலிருந்தும் எடுத்து மொத்த மாக 1001 ஹெக்டேர் பகுதியை ரப்பர் கழகம் கைவிட்டு வனத்தில் இணைக் கப்பட்டது. இதற்கு நாங்கள் எதிர்ப்பினை தெரிவித்துள்ளோம்.  கடந்த 2020 ஜூலை 25 ஆம் தேதி யன்று தொழிற்சங்களை சந்தித்து  அரசு ரப்பர் கழகத்தை மேல்படுத்து வது பற்றி அரசு ரப்பர் கழக நிர்வா கத்தினர் கலந்துரையாடலுக்கு அழைத்தனர். அப்போது அரசு ரப்பர் கழகத்தின் காளிகேசம் பிரிவு உட்பட இன்னும் 1000 ஹெக்டேர் வனத்துறை யிடம் திருப்பி ஒப்படைக்க உள்ள தாக தெரிவித்தனர். வனத்துறைக்கு நிர்ணயிக்கபட்ட குத்தகை தொகை யை செலுத்த முடியாத காரணத்தால் திருப்புவதாக கூறியுள்ளனர். குத்தகை தொகை ஹெக்டேருக்கு அதிகமாக இருந்தால் குறைவு செய்யவும் கேரளா, கர்நாடகா மாநிலங்களிலுள்ள தொகையும் கணக்கில் கொண்டு மறுபரிசீலனை செய்யவும் நாங்கள் வலியுறுத்தினோம். 

ஏற்கனவே இதுபற்றியெல்லாம் தெரிவித்தும் அது பற்றி பரிசீலிக்கா மல் மொத்த முள்ள 5000 ஹெக்ட ரில் 2000 ஹெக்டரை குறைவு செய்வது என்பது தொழில் வாய்ப்பை குறைப்ப தற்கும் திட்டமிடும் செயலாகும். உல கில் மிக தரமான ரப்பர் பகுதியை அரசு அழிப்பதன் மூலம் தனியார் தோட்ட நிர்வாகங்களே பயனடைய செய்யும் செயலாக உள்ளது. இந்த ரப்பர் கழகத்தால் இதுவரை பல்லாயிரம் தொழிலாளர்கள் குடும்பங்களும் பாதுகாக்கப்பட்டுள் ளது. ஜனநாயக முறையில் தேர்வு செய்யபட்ட அரசு எடுத்த முடிவுகளை சில அதிகாரிகள் விருப்பம் போல் திருத்தியமைத்து நோக்கத்தை சிதைப்பதை ஏற்க இயலாததாகும். இங்குள்ள தட்பவெட்பத்தின் அடிப்ப டையினால் நடவு செய்து உற்பத்தி எடுக்கும் ரப்பரை தமிழ்நாட்டில் எப்பகு தியிலும் நடவுசெய்து உற்பத்தி எடுக்க முடியாது.  தமிழக அரசின் ஒரே ரப்பர் தோட்டத்தை அழித்திட தமிழக முதல்வர் அனுமதிக்க கூடாது என்றும், அதிகாரிகளின் முடிவினை திருத்தம் செய்து 5000 ஹெக்டர் பகுதிகளிலும் ரப்பர் நடவு பராமரித்து ரப்பர் உற்பத்தி எடுத்து முன்கால அரசுகளின் மலை யோர மக்கள் வாழ்க்கை மேம்பட உரு வாக்கப்பட்ட  அரசு ரப்பர் கழக பகு தியை பாதுகாக்க நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும். இன்று வேலை செய்கின்ற, எதிர்காலத்திலும் வேலை வாய்ப்பு பெற உள்ள தொழிலாளர்க ளின் ரப்பர் கழகத்தினை  பாதுகாத்திட வும் வேலை வாய்ப்பினை வழங்க வும் நடவடிக்கை வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.