செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மாமாகுடி, தலைச்சங்காடு, மேலப்பெரும்பள்ளம், கீழப்பெரும்பள்ளம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்த ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் பயன்பெற்று வருகிறார்கள். தற்சமயம் இக்கட்டிடத்தின் மேற்கூரைகளில் நீர் கசிவு ஏற்பட்டு சிதிலமடைந்து இருப்பதாக மருத்துவர்களும், மேலப்பெரும்பள்ளம் ஊராட்சியின் சார்பாகவும் சட்டமன்ற உறுப்பினரிடம் மனு அளித்தனர். அதனடிப்படையில் மேலப்பெரும்பள்ளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ் ஆய்வு மேற்கொண்டார்.