tamilnadu

img

பருத்தி ஏலத்தில் ஏஜெண்டுகளுக்கு ஆதரவாக விலையை மாற்றிய அதிகாரிகள்

தரங்கம்பாடி, ஜூன் 18- செம்பனார்கோவில் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் மறைமுக பருத்தி ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் அதிகபட்ச விலை கிலோ ஒன்றுக்கு ரூ.55.50 விலை போனது. 750 விவசாயிகள் 2,300 மேல் பருத்தி மூட்டைகளை விற்பனை செய்த நிலையில் ஏலத்தில் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு பதிலாக மிகக் குறைவான விலைக்கு எடுத்துக் கொள்வதாக கூறி ஏஜெண்டுகளுக்கு ஆதரவாக அதிகாரிகள் முடிவை மாற்றியதால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு ஆதரவளித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் எஸ்.துரைராஜ், மார்க்சிஸ்ட் கட்சி யின் வட்ட செயலாளர் பி.சீனிவாசன், வாலிபர் சங்க வட்ட செயலாளர் கே.பி.மார்க்ஸ், திமுக விவசாய அணி மாநில இணைச் செயலாளர் அருட்செல்வன், திமுக மாவட்ட துணை செயலாளர் ஞானவேலன், ஒன்றிய தலைவர் நந்தினி ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தகவலறிந்து வந்த  அதிகாரிகள் மறு ஏலம் அறிவிக்கப்படும் என்று தெரி வித்ததால் போராட்டம் கைவிடப்பட்டது.