திருத்துறைப்பூண்டி ஆக.7- திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா, முத்துபேட்டை ஒன்றியம் பின்னத்தூர் ஊரா ட்சியில் பின்னத்தூர் கைலா சநாதர் கோவிலுக்கு சொந்த மான தோலிரோட்டடு குளம் 12 ஏக்கர் மனைகளுக்கு இடையில் உள்ளது. இந்த குளத்தை சுற்றி யுள்ள 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இக்குளத்தை பயன்படுத்தி வந்த நிலையில், தனிநபர் ஒருவர் குளத்தின் கரைகளை ஆக்கிரமித்து, அதில் வர்த்தக கட்டிடங்களை கட்டி வாடகை வசூல் செய்து வருகிறார். இத னால் குளத்தை மக்கள் பயன்படுத்த முடியாமல் போ னது. குப்பைகளால் தண்ணீர் சாக்கடையாகி சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. பல தொற்று நோய்களுக்கு மக்கள் ஆளா கும் நிலை உள்ளது. எனவே அறநிலையத் துறையும் அரசும் கவ னத்தில் எடுத்துகொண்டு குள த்தை சுற்றியுள்ள ஆக்கிர மிப்புகளை அகற்றி குளத்தை மக்களின் பயன்பாட்டுக்கு மீட்டுத் தருமாறு பின்ன த்தூர் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.