tamilnadu

மயிலாடுதுறை தொகுதி எம்.பி. ராமலிங்கத்திற்கு கொரோனா உறுதி

கும்பகோணம், ஆக.4- மயிலாடுதுறை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம் கொரோனா காலத்தில் பல்வேறு  நிவார ணப் பணிகளிலும் கட்சி  சம்பந்தப்பட்ட நிகழ்ச்சியி லும் பங்கேற்றார். இந்நிலையில் மயிலாடு துறை மாவட்டம் பிரிப்பது தொ டர்பாக தமிழக அமை ச்சர் ஓ.எஸ்.மணியன் தலை மையில் மயிலாடுதுறை மன்னம்பந்தலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஜூலை 30 அன்று நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்ட த்தில் பங்கேற்று, திருவி டைமருதூர் அருகில் உள்ள  முருக்கங்குடி ஆரம்ப சுகா தார நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார்.  இந்நிலையில் திங்க ளன்று  அவருக்கு தொற்று உறுதியாகியிருப்பதாக முரு க்கங்குடி ஆரம்ப சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில் கும்பகோணம் அருகே உள்ள சீனி வாசபுரம்  ஊராட்சியில் அவ ரது இல்லத்தில் தனிமை ப்படுத்தி இருந்தார். பிறகு  மேல்சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்க ப்பட்டு சிகிச்சை பெற்று வரு கிறார்.  ஏற்கனவே  மயிலாடு துறை மாவட்டம் பிரிப்பது சம்பந்தமாக கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்து கொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யை சேர்ந்த நாகை மக்கள வைத் தொகுதி உறுப்பினர்  செல்வராஜ் நோய்த்தொற்று ஏற்பட்டு தஞ்சை மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று  வருகிறார் என்பது குறிப்பிட த்தக்கது.  மேலும் ராமலிங்கத்திடம் தொடர்பு வைத்துள்ள இரு நபர்களுக்கு தொற்று பரவி உள்ளதாக  கூறப்படுகிறது. இதனால் எம்பி ராமலிங்கம் குடும்பத்தினருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளதா என பரிசோதனை செய்து வரு கின்றனர்.