tamilnadu

கொள்ளிடம் பகுதியில்  நூறு நாள் வேலை துவங்கியது

 சீர்காழி, மே6- கொள்ளிடம் ஒன்றியத்தில் 42 ஊராட்சிகளைச் சேர்ந்த 200 கிராமங்களில், கொரோனா ஊரடங்கு உத்தரவால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் வேலை நடைபெறுவது நிறுத்தி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 41 நாட்களுக்குப் பிறகு செவ்வாயன்று முதல் நூறு நாள் வேலை மீண்டும் துவங்கியது.  இத்திட்டத்தில் ஈடுபடும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள், பணியாளர்களுக்கு கொள்ளிடம் ஒன்றிய அலுவலகத்தில், கை கழுவும் கிருமிநாசினி விற்பனை துவங்கப்பட்டது. பின்னர் பிடி.ஓ ஜான்சன் கூறுகையில், கொள்ளிடம் ஒன்றி யத்தில் ஒரு நாளைக்கு 10 ஆயிரத்து 25 பேரை பணியில் ஈடு படுத்த வேண்டும். வேலையை துவங்குவதற்கு முன்பு முகக்க வசம் அணிந்து கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும். இரண்டு மீட்டர் இடைவெளி விட்டு வேலையில் ஈடுபட  வேண்டும். முகக்கவசம் அணியாதவர்களுக்கும், 50 வயதைக்  கடந்தவர்களுக்கும் வேலைக்கு அனுமதி இல்லை என்றார்.